நாட்டு சேதியும் !!!! நம்ம சேதியும் !!!!

 நாட்டு சேதியும் !!!! நம்ம சேதியும் !!!!
நாட்டு சேதியும் !!!  நம்ம சேதியும்!!!!
        மக்களின் நன்மைக்காகவே புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன._ முதல்வர் பழனிசாமி.
        நம்பிட்டோம் எசமான் !!!
*************************************
           இந்தியாவில் பெரிய மாநிலங்களில் அனைத்து துறை செயல்பாட்டில் மிகச் சிறந்த மாநிலம்- சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதில் மிகச் சிறந்த மாநிலம்- சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம்- ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த செயல்பாட்டுக்காக தமிழக அரசுக்கு 3 விருதுகள்- இந்தியா டுடே பத்திரிகையின் சார்பில் வழங்கப்பட்டன.
        “ஓட்டப்பந்தயத்தில் எனக்கு முதல் பரிசு தெரியுமா?”, 
        “அப்படியா!?”, 
        “எத்தன பேர் கலந்துகிட்டாங்க?!”,
        ” நான் மட்டும்தான்…!!!”
**************************************
          சிவசேனை- என்சிபி- காங்கிரஸ்- கூட்டணி மகாராஷ்டிரத்தில் இணைந்து ஆட்சி அமைத்தால் அந்த  கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். அது அடுத்த 6 முதல் 8 மாதங்கள் வரை கூட நீடிக்காது.- மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
            அதுக்கும் திட்டம் தயாரிச்சுட்டீங்க‌ போல…. நீங்க‌ நெனைச்சா முடியாததா?? நடத்துங்க… நடத்துங்க…
******************************
         ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இந்தியாவிடம் மன்னிப்புக் கோருவோம்.- தேர்தல் அறிக்கையில் பிரிட்டன் தொழிலாளர் கட்சி.
         
              அட என்னங்க நீங்க!? அதை விட பெரிய பெரிய துரோகத்தை எல்லாம் எங்க உள்ளூர் அரசியல்வாதிகள் செஞ்சதையே நாங்க மறந்துட்டோம். நீங்க என்னடானா அதை போய் இன்னும் ஞாபகம் வச்சு இருக்கீங்க …..
*************************************

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...