தமிழோடு கலந்துவிட்டார்
![தமிழோடு கலந்துவிட்டார்](https://i0.wp.com/minkaithadi.com/wp-content/uploads/2024/02/download-5.jpg?resize=271%2C186&ssl=1)
எழுத்தாளர் சுஜாதா அவர்களே
உமது படைப்புக்கள் ஒவ்வொன்றும்
எளிமையானதா
எவரையும் ஈர்ப்பதா
கருத்து மிக்கதா
கவலை மறப்பதா
அறிவை வளர்ப்பதா
ஆனந்தம் தருவதா
ஞானம் உள்ளதா
விஞ்ஞானம் சேர்ந்ததா
சுகம் தருவதா
சுவை மிக்கதா
சக்தி கொடுப்பதா
சரித்திரம் படைத்ததா
வினோதம் என்பதா
விளக்கம் தருவதா
சிரிக்க வைப்பதா
சிந்தனையைத் துண்டுவதா
உயர்வைச் சொல்வதா
உள்ளத்தை தொடுவதா
புவியில் வலம் வந்ததா
புவிக்கு வளம் சேர்த்ததா
வாழும்போது தமிழை சுவாசித்தாய்
வாழ்ந்தபின்
தமிழோடு கலந்துவிட்டார்
முருக. சண்முகம்.
![](https://i0.wp.com/minkaithadi.com/wp-content/uploads/2024/02/294232728_1582189812174998_4123871285233500727_n.jpg?resize=128%2C128&ssl=1)