இன்றைய ராசி பலன்கள் ( 28 பிப்ரவரி புதன்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( 28 பிப்ரவரி புதன்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 28ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

சோபகிருது வருடம் மாசி மாதம் 16 ஆம் தேதி புதன்கிழமை 28.02.2024, சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். அதிகாலை 12.55 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று காலை 06.31வரை அஸ்தம். பின்னர் சித்திரை. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் சாதகமாகும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். நண்பர் களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உறவினர்களை அனுசரித் துச் செல்லவும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் உண்டா கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபா ரம் வழக்கம்போல் நடைபெறும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வரு வார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபா ரிகளின் உபத்திரவங்கள் நீங்கும். சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளி லும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமை யின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். அம்பிகையை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.

சிம்ம ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர் கள் உதவி கேட்டு வருவார்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வாகனத் தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சிறு சிறு சச்சரவு கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். மகாலட்சுமி வழிபாடு நன்று.

துலா ராசி அன்பர்களே!

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிற்சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆறுமுகக் கடவுளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடுதலாக நடைபெறும்.

தனுசு ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்வது அவசியம். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அம்பிகையை தியானித்து நாளைத் தொடங்கிட சிரமங்கள் நீங்கும்.

மகர ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர் கள். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள். உங்கள் முயற் சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படும். தந்தையுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். மகாவிஷ்ணுவை வழிபட, மகிழ்ச்சி கூடுதலாகும்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்கக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்ப டும். நண்பர்கள் அனுசரணையாக இருப்பர். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் வீண் பிரச்னை கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விநாயகரை வழிபட புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

மீனராசி அன்பர்களே!

இன்றைக்கும் எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்பட வேண் டும். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்து கொள் வது அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். விநாயகரை வழிபட நன்மைகள் ஏற்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...