6 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி திட்டம் – அமைச்சர் தங்கமணி

6 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி திட்டம் – அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 6 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு புதிய மின் உற்பத்தித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் அரசு கட்டடங்களை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இனி மின்தடையே இல்லை என்ற சூழலை அரசு உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார். விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் மற்றும் உயர்மின்பாதை அமைக்கும்போது, விவசாயிகளுக்கு அதிகஅளவு நஷ்டஈடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

டாஸ்மாக் கடைகளில்  ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளுக்காக நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!