அயோத்தி ராமன்”

 அயோத்தி ராமன்”

“அயோத்தி ராமன்”

ரகுவம்சத்
திலகமவன்,

அயோத்திய நாட்டின் 

மாமன்னன்,

மரியாதா 

புருஷோத்தமன்,

உலகம் போற்றும் 

ஸ்ரீராமன்,

இன்று அயோத்தியா 

வருகின்றார்,(22.1.24),

புதுக் கோவிலுக்குள் 

நுழைகின்றார்.

500 ஆண்டுகட்கு  

முன்பாக,

இடிக்கப்பட்ட அவர் 

கோவில்தனை,

பிரமாண்டமாகப் 

புதுப்பித்து,

இழந்த பெருமையை 

மீட்கப்போகும்,

பாரத நாடு
மகிழ்கிறது,

பக்தி வெள்ளத்தில் 

திளைக்கிறது.

மோடிஜி கோவிலைத் 

 திறக்கின்றார்.

சரித்திர நாயகன் 

ஆகின்றார்.

நாட்டு மக்கள் 

மனதினிலே,

இனம் புரியா 

சந்தோஷம்,

சொல்லவொண்ணா 

உற்சாகம்,

ஊரெங்கும் 

கொண்டாட்டம்.

எங்கும் “ஜெய் ஸ்ரீ ராம்” 

என்னும் கரகோஷம்.

நாம் ராம நாமம் 

துதித்திடுவோம்

ராமன் அருளைப் 

பெற்றிடுவோம்.


பி வி வைத்தியலிங்கம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...