ஒரு தாயாகத் தான் என் கருக்களைகாதலாய் பிரசவிக்கிறேன் ..

 ஒரு தாயாகத் தான் என் கருக்களைகாதலாய் பிரசவிக்கிறேன் ..

ஒரு தாயாகத் தான் என் கருக்களை
காதலாய் பிரசவிக்கிறேன் ..

மூன்று வரங்கள் தான் நான் கேட்கிறேன்
தீர்ந்து போகாத சொற்கள்
தீர்ந்து போகாத பக்கங்கள்
தீர்ந்து போகாத சிறகுகள்

நான் காலங்களை நகர்த்துவதும் கடத்துவதும் அல்ல

ஒவ்வொரு நாழிகையும்
ஒவ்வொரு சிமிழ் களாக பிரித்து
பிரயாசை களை புனைந்து
தீர்க்கரேகை களில் சாமரம் வீசும் மயில்தோகைகளாய் வர்ணங்கள் குழைத்து அலங்காரமிட்டு
ஆத்மார்த்தி யாய் மதுரங் கொள்ளும்

நான் ஒரு தீராநதி
நான் ஒரு தருண்யை
நான் ஒரு வான்
நான் ஒரு நித்யம் …

சகுந்தலா ஸ்ரீனிவாசன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...