பேனர் கலாசாரத்தை ஒழிங்க
பேனர் கலாசாரத்தை ஒழிங்க–
அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழா, சென்னை கோவில்பாக்கத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, நகரின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இசம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவி்த்திருந்தஇந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜிம்பிங்கும் விரைவில் மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளனர். இரு நாட்டு தலைவர்களும், வரும் 11 -ஆம் தேதி முதல் 13 -ஆம் தேதி வரை பல்வேறு விஷயங்கள் குறித்து அங்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
பிரதமரின் வருகையையொட்டி, அவரை வரவேற்று சாலைகளில் பேனர்களை வைக்க, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ட்விட்டர் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவில், ” பேனர் கலாசாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிர் பலியாகியுள்ளார். இந்த நிவையில் தங்களின் தமிழக வருகைக்காக பேனர் வைக்க தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.