மதுரையில் சுற்றுலா ரயிலில் தீ விபத்து!

மதுரையில் சுற்றுலா செல்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயிலின் சிறப்பு முன்பதிவு பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீயில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த ரயிலில் 90 வடமாநில பயணிகள் பயணித்துள்ளனர்.

மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வந்துள்ளது.

முதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டி, சுற்றுலா ரெயிலின் ஒரு பெட்டியாகும்.

தீ விபத்து ஏற்பட்டது திருப்பதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ரெயிலின் சிறப்பு முன்பதிவு செய்யப்பட்ட கடைசி பெட்டியாகும்.

ரயில் பெட்டியில் கேஸ் சிலிண்டரின் பாகங்கள் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயிலில் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், இந்த சிலிண்டர் எப்படி வந்தது என்பது குறித்து முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பெட்டியில் சுமார் 90 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் தீ விபத்து ஏற்பட்டதும் 80-க்கும் மேற்பட்டோர் பெட்டியில் இருந்த குதித்து தப்பித்துள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சிலிண்டர் வைத்து சமைத்தபோது, தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 4 தீயணைப்பு வண்டிகள் மூலம் சுமார் 20 வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

தீ விபத்தில் பலியான 9 பேரும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ பரவிய பெட்டியை மட்டும் ரயில்வே துறையினர் தனியாக பிரித்துள்ளனர். அந்த பெட்டியில் பரவிய தீயை தீயணைப்பு துறையினர் முழுமையாக அனைத்துள்ளனர்.

இது குறித்து இரயில்வே போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!