மீண்டும் ஏ.ஆர். ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி!

 மீண்டும் ஏ.ஆர். ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி!

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையத்து வருகிறார். அவர் நடத்தும் இசை நிகழ்ச்சியை காண அவரது ரசிகர்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பர். அந்த வகையில் ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

“மறக்குமா நெஞ்சம் ” இசை நிகழ்ச்சி, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நடைபெற இருந்தது. வேறொரு நாளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் அறிவித்தனர். அதனால், உலகெங்குமிருந்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால் அன்றைய தினம் பெய்த மழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்த நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் செப்டம்பர் 10-ந்தேதி நடைபெறும் என்றும் முன்னதாக பெற்ற டிக்கெட்டுக்களை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஹ்மான் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...