ராகுல்காந்தி எம்.பி வயநாடு வருகை!

 ராகுல்காந்தி எம்.பி வயநாடு வருகை!

மீண்டும் எம்.பி.யாக பதவியேற்ற பிறகு ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

நீலகிரி வழியாக வயநாடு செல்லும் ராகுல்காந்தி, அங்கு தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார் என தகவல்கள் சொல்லப்படுகிறது.

12 மற்றும் 13-ந் தேதிகளில் கேரளா சென்று தொகுதி மக்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு வயநாடு வருகிறார். அவருக்கு மாவட்ட தலைமையகமான கல்பேட்டை பகுதியில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.

2 நாட்கள் நடைபெறும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சித்திக் தெரிவித்தார்.

எம்.பி தகுதி நீக்க உத்தரவு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல், அங்கிருந்து கார் மூலம் ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்கிறார். அங்கு, முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து அவருடன் தேநீர் அருந்துகிறார்.

தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு குறித்து கேட்டறிகிறார்.
பின்னர், மதிய உணவை முடித்து கொண்டு கூடலூர் செல்லும் வழியில் முத்தநாடு மந்து பகுதியில் உள்ள தோடர் பழங்குடியின கிராமத்திற்கு செல்கிறார்.

அங்கு பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களது கோயிலை பார்வையிடுகிறார். அதன்பின்னர், அங்கிருந்து கூடலூர், மசினகுடி, முதுமலை வழியாக கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்வதாக கூறப்படுகிறது. ராகுலின் ஊட்டி வருகையையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...