இளையராஜா பாடலை முதன் முறையாக பாடிய யுவன்!

இளையராஜா பாடலை முதன் முறையாக பாடிய யுவன்! கச்சிதமாய் பொருந்திய படத்தலைப்பு!

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் வரிகளில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது ’நினைவெல்லாம் நீயடா’ திரைப்படம். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘சிலந்தி’, ’ரணதந்த்ரா’, சமீபத்தில் வெளியான ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி முடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற ’வழி நெடுக காட்டுமல்லி’ என்ற பாடலை எழுதிப் பாடிய இளையராஜா இதுவரை சுமார் 200 பாடல்களை எழுதியிருக்கிறார். தற்போது இந்த படத்திற்காக ’இதயமே…. இதயமே… இதயமே‌‌…’ என்ற பாடலை எழுதியிருக்கிறார்.

இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி கொடுத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து ஸ்ரீஷா பகவதுல்லா பாடியிருக்கிறார். இளையராஜா இசையில் பல பாடல்களை பாடி இருந்தாலும் இளையராஜா எழுதிய பாடலை யுவன் பாடி இருப்பது இதுவே முதல் முறை.

பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் நாயகன், நாயகியாக ரோஹித் மற்றும் யுவலட்சுமி நடிக்கின்றனர்‌. முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!