குத்துச்சண்டை இளம் வீரர்களுக்குப் பாராட்டு விழா

தமிழ்நாடு மாநில பாக்ஸிங் அசோஸியேஷன் மற்றும் சென்னை அமெச்சூர் பாக்ஸிங் அசோஸியேஷன் இணைந்து முதலமைச்சர் கோப்பை மாநில ஓப்பன் சேம்பியன்ஷிப் 2023 போட்டியை நடத்தியது. அதில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு போட்டியிட்டனர்.  

இந்த முதலமைச்சர் கோப்பை பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.  அதில் கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.டி. பாக்ஸிங் கிளப்பில் இருந்து எட்டு குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார்கள். அவர்களில் ஐந்து பேர் தங்கப் பதக்கமும் மூன்று பேர் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். அவர்களைப் பாராட்டும்விதமாகப் பெரிய கோப்பையை வழங்கியதோடு பரிசுத் தொகையும் வழங்கினார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்.

அந்த மாணவர்களைப் பாராட்டும் விதமாக கடந்த வாரம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.டி. பாக்ஸிங் கிளப்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாணவர்களின் பெற்றோரும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு பரிசு வென்ற மாணவர்களைப் பாராட்டிப் பேசினார்கள். பரிசு பெற்ற மாணவர்கள் உற்சாகமாக அங்கு சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களின் மாஸ்டர் விஜி அவர்களைத் தட்டிக்கொடுத்து பயிற்சி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!