அமெரிக்காவிலும் சைபர் க்ரைம் கைவரிசை… !

 அமெரிக்காவிலும் சைபர் க்ரைம் கைவரிசை… !

நாளுக்கு நாள் சைபர் கிரைம் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கில்லை. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் திடீரென இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவதுறை முடங்கியது.

கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்தது.

இதனால் ஆஸ்பத்திரிகளின் கணினி அமைப்புகள் திடீரென முடங்கியது. இதையடுத்து அந்த மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பிற சேவைகள் நிறுத்தப்பட்டன. சில அவசர அறைகள் மூடப்பட்டன. சைபர் தாக்குதல் மூலம் ஆஸ்பத்திரிகளின் தகவல்களை திருட வாய்ப்பு இருந்ததால் அதை தடுக்க, சர்வர்கள் ஆப்லைனில் வைக்கப்பட்டது.

யார் இந்த சைபர் தாக்குதலை நடத்தியது என்பது குறித்து தீவிர விசாரணைகள் நடைப்பெற்று வருகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...