வங்கி வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வுப் பதிவு

 வங்கி வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வுப் பதிவு

நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பாக காரைக்குடியில் கல்லூரிச் சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள நான் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கியின் ஏ.டி.எம். பிரிவிற்குச் சென்றிருந்தேன். ஏ.டி.எம். வழியாகப் பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வரவில்லை. என்னுடைய பாஸ்வேர்டு கொடுத்து, OTP கொடுத்து என அனைத்தையும் கொடுத்த பிறகும் பணம் வெளியாகவில்லை.

PLEASE CONTACT YOUR BRANCH என்று அதனில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் எனது இணையத்தின் வழியாக (NET BANKING)  வங்கிக் கணக்கை ஆப்ரேட் செய்ய முயற்சி செய்தபோது, FREEZE ACCOUNT FREEZE என்று வந்தது. 

இதனைத் தொடர்ந்து வங்கியின் மேலாளர் அவர்களைச் சென்று சந்தித்தேன். தங்களுடைய ஆவணங்கள் எதுவுமே எங்களுடைய வங்கியில் இல்லை. எனவே உங்களது அக்கவுண்ட்டை நாங்கள் FREEZE செய்துள்ளோம். அதுவும் CENTRALIZE ஆக  இதுபோன்று  செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக நான் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். எனக்கு எந்தவிதமான கடனும் அந்த வங்கியில் இல்லை. அப்படி இருக்கும் பொழுது எனது வங்கிக் கணக்கை பிரீஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

பலமுறை நான் அவர்களுக்கு ஆவணங்களை நேரில் சென்று கொடுத்துள்ளேன். ஆனால் அவர்களோ சர்வசாதாரணமாக இதுபோன்று ஒரு அதிர்ச்சியான தகவலை என்னிடம் தெரிவித்தார்கள்.

நான் முக்கியமான ஒரு மருத்துவச் செலவுக்காக மருத்துவமனையில் இருந்துதான் ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்துக் கொடுப்பதற்காகச் சென்றிருந்தேன். ஆனால் இணையத்தின் வழியாகவும் எனது வங்கிக் கணக்கை இயக்க முடியவில்லை. ஏ.டி.எம்.மில் இருந்தும் பணம்  எடுக்க முடியும் முடியவில்லை.

முக்கியமான மருத்துவச் செலவுக்குக் கூட எனது அக்கவுண்டில் இருந்து எனது பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளரை நேரில் சந்தித்து கேட்டேன். மேலாளர் அவர்களோ  மிக அலட்சியமாக “ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகளை நாங்கள் இது போல் ஃப்ரீஸ் செய்து உள்ளோம்” என்று கூறினார்.

தங்களது ஆவணங்கள் எதுவுமே எங்களது வங்கியில் இல்லை. எனவே ஆவணத்தைக் கொடுங்கள். freeze செய்ததை  எடுத்து விடுகிறோம் என்று தெரிவித்தார். ஆவணம் பலமுறை அந்த வங்கிக்கு நான் நேரில் சென்று கொடுத்துள்ளேன்.

அந்த ஆவணங்களை என்ன செய்தார்கள் என்பதே தெரியவில்லை. ஆவணங்கள் இல்லாமல்  இருக்க வாய்ப்பில்லை. ஆவணங்கள் இல்லை என்றால் மெயில் வழியாக, மொபைல் வழியாக  எனக்கு ஒரு தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட நாளில் கொடுக்கக் கேட்டிருக்கவேண்டும். 

ஏனென்றால் எனக்கு இணையத்தின் வழியாக அங்கே கணக்கு ஆப்பரேட் செய்யப்படுகிறது. எனவே எனது மெயில் அவர்களிடம் உள்ளது. மேலும் எனது மொபைல் நம்பரும் அவர்களிடம் உள்ளது.

மொபைல் நம்பரில் ஒரு மெசேஜ் கொடுத்து அல்லது மெயிலில் ஒரு மெசேஜ் கொடுத்து எத்தனை நாளுக்குள் நீங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்திருக்கலாம்.

ஆனால் அவர்களோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் அக்கவுண்ட் FREEZE  செய்துவிட்டார்கள்.  இதை நான் ஒரு முக்கியமான வெளியூர் பயணத்தில் இருக்கும்போது,   குறிப்பாக மும்பை, டெல்லி என்று வேறு மாநிலங்களில் பயணிக்கும்பொழுது, எனது வங்கிக் கணக்கில் போதிய அளவு பணம் இருந்தும், நானே  பணம் எடுக்க முடியவில்லை என்றால் எனது நிலைமை என்னவென்று  யோசியுங்கள்.

முக்கியமான மருத்துவச் செலவிற்கு அன்று என்னால் பணம் எடுத்துச் செலவுக்குக் கொடுக்க இயலவில்லை.  நான் மேலாளரைச் சந்தித்து மேலாளரிடம் “உங்களுக்கு என்ன ஆவணம் வேண்டுமோ அதனை ஈமெயில் வழியாகவும், மெசேஜ் வழியாகவும் எனக்குத் தெரிவியுங்கள். நான் அவற்றை எடுத்துவந்து தந்து விடுகின்றேன்” என்று கூறினேன்.

ஆனால் இப்பொழுது எனது கணக்கை எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் ஃப்ரீஸ் செய்ததை வன்மையாக ஆட்சேபித்து  பதிவு செய்கின்றேன் என்று அவரிடம் கூறினேன்.

எனவே  எனது கணக்கை தற்பொழுது freeze இல்  இருந்து எடுத்து விடுமாறு  அன்போடு கேட்டுக் கொண்டேன். சில மணி நேரங்கள் அவரிடம் பேசிய பிறகு அவர் எனது கணக்கை ஆக்டிவேட் செய்தார்கள்.

பலமுறை நான் ஆவணங்கள் கொடுத்தும் அதனை வங்கியின் இணையத்தில் ஏற்றாதது அவர்களுடைய தவறு தானே தவிர  அது எனது தவறு கிடையாது.

ஆனால் முக்கியமான கட்டத்தில் வங்கியில் முன்பு கொடுத்த ஆவணங்கள்  இல்லை என்பதற்காக கணக்கை freeeze  செய்தது மிகவும் தவறானது  என்பதைப் பதிவு செய்துவிட்டு வந்தேன்.

பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு உங்களுடைய கணக்குகள் ஃப்ரீஸ் ஆகி இருந்தால் அதனைச் சரி செய்து கொள்ளுமாறு இந்தத் தகவலின் மூலமாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • எம்.எஸ்.லட்சுமணன், காரைக்குடி

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...