நிழல் இல்லாத நாள் || பார்ப்பது எப்படி?

 நிழல் இல்லாத நாள் || பார்ப்பது எப்படி?

சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்ப்பது எப்படி என்கிற அறிவியல் விவரங்களைப் பள்ளி மாணவர்களுக்குத்  தெளிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நிழலில்லாத நாள் குறித்து தங்களைச் சுற்றியுள்ள பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் உறவினர்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை எவ்வாறு தெரிவிப்பது என்பது தொடர்பாகப் பள்ளி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்கள்.

நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி  ஆகியோர்  மாணவர்களை உற்சாகப்படுத்தி அறிவியல் உண்மைகளை விளக்கினார்கள்.

இப்பள்ளி மாணவர்கள் திவ்யஸ்ரீ, கனிஷ்கா, ஹரிப்ரியா  ஆகியோர்   பள்ளி மாணவர்களிடம்  ‘‘இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் இம்மாதம்  ஏப்ரல்  15ஆம் தேதி தேவகோட்டை பகுதியில் மதியம் 12 மணி 15 நிமிடங்களில் நடைபெறும்.

பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும். சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்குச் சமமாக மாறும்போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரியக் கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும். அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும்.  இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் அன்று  நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்குக் கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது’’ என்று செயல்முறை செய்து காண்பித்து விளக்கிக் கூறினார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க வலைதளப் பதிவுகள், தகவல்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக்க கூறினார்கள்.  

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...