சுபாஸ்கரனும் லைகா நிறுவனமும் ஒரு பார்வை…

 சுபாஸ்கரனும் லைகா  நிறுவனமும் ஒரு பார்வை…

இந்தியத் திரைப்படத் துறையில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ரஜினி நடித்த ‘2.0’ படம் ஏற்படுத்திய தாக்கம் அடங்கிய உடனே தற்போது ‘பொன்னியின் செல்வன்’ ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்துகொண்டுள்ளது. லைகா தயாரிப்பு என்றாலே மிகப் பிரம்மாண்டம்தான். தற்போது ரஜினி நடித்து தயாராகியுள்ள ‘தர்பார்’, கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’, மணிரத்னம் இயக்கி அடுத்த மாதம் வெளிவரவுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வருகிறது லைகா.

சரி லைகா தயாரிப்பு நிறுவன முதலாளி யார்? கொஞ்சம் பார்ப்போம்.

தொழிலதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை முள்ளியவளை பகுதியைச் சேர்ந்தவர். 1972, மார்ச் 2ல் பிறந்த சுபாஷ்கரன் இலங்கையில் இனக்கலவரத்தின் உச்சக்கட்டத்தில் இலங்கையிலிருந்து வெளியேறி, முதலில் பிரான்சுக்குச் சென்று, ஐரோப்பாவுக்கு வந்தபோது சுபாஸ்கரனுக்கு வயது 17. அவர் தனது குடும்பத்தினர் பாரிஸில் நடத்திவந்த உணவகத்தில் வேலை செய்து பின் முழுவதும் கவனித்து வந்தார். பின்னர் இங்கிலாந்தில் குடியேறி வசித்துவரும் சுபாஷ்கரனுக்கு தற்போது 41 வயதாகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக உலகம் முழுவதும் நிதி திரட்டப்பட்டு இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக சுபாஸ்கரன் முனைப்பு காட்டினார். நிதிகள் உலகமெங்குமிருந்து குவிந்தன. அதைக் கண்டறிந்த இலங்கை ராஜபக்சே அரசு சுபாஸ்கரன் மேல் வழக்குத் தொடுத்து சுற்றி வளைத்தது. உடனே சுபாஸ்கரன் சுதாரித்துக்கொண்டு ராஜபக்சேவின் தூண்டுதலில் பேரில் ராஜபக்சே மகனை அதில் பங்குதாரராக ரகசியமாக இணைத்துக்கொண்டார். தற்போது இலங்கை அரசே கவிழ்ந்துவிட்டது. தற்போது எதற்குத் தொடங்கியதோ அதிலிருந்து முற்றிலுமாக மாறி தனித் தொழிலதிபராக மாறிப்போனார் சுபாஸ்கரன்.

சரி நிறுவன வளர்ச்சியைப் பார்ப்போம்.

லைகா குழுமத்தின் முதன்மை பிராண்ட் லைகா மொபைல் 2006இல் நெதர்லாந்தில் தொடங்கப்பட்டது. அங்கிருந்து, பெல்ஜியம், டென்மார்க், நார்வே மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவடைந்தது. தற்போது 23 நாடுகளில் 15 மில்லியன் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்து வருவதாக Lycamobile கூறுகிறது. மேலும் தென்கிழக்கு ஆசியா, துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிக சந்தைகளுக்கு விரிவாக்கம் செய்வதன் மூலம் 2023ஆம் ஆண்டுக்குள் 60 மில்லியன் வாடிக்கையாளர்களை அடையும் என்று நம்புகிறது.

சுபாஸ்கரன் இப்போது இங்கிலாந்தில் இருந்துகொண்டு தனது குழுமத்தின் தொலைத்தொடர்பு, சுகாதாரம், நிதி சேவைகள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

லைகா தயாரிப்பு நிறுவனம் பற்றி

2008ஆம் ஆண்டு லைக்ரா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் தயாரித்த முதல் திரைப்படம் ‘பிரிவோம் சந்திப்போம்’. பின்னர், 2014ஆம் ஆண்டில், லைகா புரொடக்‌ஷன்ஸ் ஐங்கரன் இன்டர்நேஷனலுடன் இணைந்து ‘கத்தி’ என்ற திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் எழுதி இயக்கினார். விஜய், சமந்தா நடித்துள்ளனர். அந்தப் படம் அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன்பிறகு எனக்கு இன்னொரு பேர் இருகா (2016), யாணம் (2017) போன்ற பல படங்களைத் தயாரித்துள்ளார்.

ஷங்கர் எழுதி இயக்கி ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த ‘ரோபோ 2.0’ படத்தை லைகா சுபாஷ்கரன் முதலில் தயாரித்தார். இந்தப்படம் பட்ஜெட் சுமார் $59 மில்லியன். இன்றுவரை இந்தியத் திரைப்படத்துறையில் வேறு எந்தப் படமும் இந்த பட்ஜெட்டை எட்டவில்லை.

திரைப்படத் தயாரிப்பைத் தவிர, லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் வெற்றிவேல், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களையும் விநியோகித்துள்ளார்.

சமூக சேவை அமைப்பு

அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அவரது தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா ஆகியோர் 2010ஆம் ஆண்டு ஞானம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் கவனிப்பின்றி கைவிடப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனிநபர், குடும்பம் அல்லது சமூகம் அடிப்படையில் குறிப்பிட்ட திட்டங்களுக்குத் தேவைப்படுபவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதியை நீட்டிக்க தோற்றுவிக்கப்பட்டது. ஞானம் அறக்கட்டளையானது ‘ஒரு நபருக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள்’ என்ற அடிப்படையாகக் கொண்டது. மக்கள் தங்களைத் தாங்களே ஆதரிப்பதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

2012ஆம் ஆண்டு முதல், ஞானம் அறக்கட்டளையானது, பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட், குழந்தைகளின் பசி நிவாரணம் மற்றும் முஸ்லிம் உதவி உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து பல தகுதியான காரணங்களுக்காக நன்கொடை அளித்துள்ளது. 2015ஆம் ஆண்டில், ஞானம் அறக்கட்டளை இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 150 வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளது.

லைகாமொபைல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களால் 2010 டிசம்பரில் லைகாஹெல்த் தலைவரான அவரது மனைவி திருமதி பிரேமா சுபாஸ்கரன், அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் உருவாக்கப்பட்டது.

இது பற்றி லைகா சுபாஷ்கரன் கூறும்போது, “தமிழ்ச் சமூகங்களுக்குத் தங்குமிடம், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு வழங்குவதன் மூலம் சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலமும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமும் இதை அடைய நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். தனிநபர், குடும்பம் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் வாழ்க்கையை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம் மற்றும் தற்காலிக மேம்பாடுகளுக்குப் பதிலாக நீண்டகால நிலைத்தன்மையை உறுதிசெய்வதன் மூலம் ‘ஒரு மனிதனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள்’ மாதிரியை அடிப்படையாகக் கொண்டுள்ளோம். இதையொட்டி, இது அவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் அவர்களின் குடும்ப வருமானத்தை மேம்படுத்த உதவும்.கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் நிலைமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, அவசரகால முறையீடுகள் எழும்போதும் நாங்கள் பதிலளிக்கிறோம். நாங்கள் தற்போது இலங்கை, இந்தியா, சூடான், தான்சானியா, ருமேனியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் செயல்படுகிறோம். Lyca குழுமத்தின் ஞானம் அறக்கட்டளை, வரும் ஆண்டுகளில் உலகளவில் வளர்ச்சியடைய லட்சியத் திட்டங்களைக் கொண்டுள்ளது, தேவையான இடங்களில் உதவிகளை வழங்குகிறது” என்றார்.

2010ஆம் ஆண்டு ஆசிய சாதனையாளர் விருது வழங்கும் விழாவில், இங்கிலாந்தில் ஆசிய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்திற்காக சுபாஷ்கரன் அல்லிராஜா சிறந்த ஒட்டுமொத்த லைகா நிறுவனத்திற்கான தங்க விருதைப் பெற்றார். 2011ஆம் ஆண்டு ஆசிய அரசியல் குரல் மற்றும் பொது வாழ்வு அடிப்படையில் சுபாஷ்கரன் அல்லிராஜாவிற்கு அந்த ஆண்டின் ‘சிறந்த சர்வதேச தொழில்முனைவோர்’ விருதை வழங்கியது.

‘2011ஆம் ஆண்டின் பவர் பிசினஸ் ஆஃப் தி இயர்’ விருதை வழங்கியது. இது உலகளவில் லைகா மொபைல் வணிகத்தின் வளர்ச்சியை அங்கீகரித்தது. அத்துடன் ஆண்டின் சமூகத் தொழில்முனைவோர்’ விருது வழங்கப்பட்டது.

அக்டோபர் 2011 இல், சண்டே டைம்ஸ் 250 முன்னணி நடுத்தர சந்தை தனியார் நிறுவனங்களில் Lycatel முதல் இடத்தைப் பிடித்தது.

2010ஆம் ஆண்டு ஆசிய சாதனையாளர் விருது வழங்கும் விழாவில், இங்கிலாந்தில் ஆசிய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்திற்காக அல்லிராஜா சிறந்த ஒட்டுமொத்த நிறுவனத்திற்கான தங்க விருதைப் பெற்றார். Lyca Mobile ஆனது சிறந்த MVNO விருதைப் பெற்றது, வோடஃபோன் மற்றும் O2க்கு எதிராக வென்று 2013இல் முன்னிலை பெற்றது.

ஆசிய குரல் அரசியல் மற்றும் பொது வாழ்வு 2011 இல் அல்லிராஜாவிற்கு ‘ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர்’ விருதை வழங்கியது.

2012ஆம் ஆண்டில் ஆங்கில ஆசிய வணிக விருதுகள் அல்லிராஜாவிற்கு ‘2011ஆம் ஆண்டின் சிறந்த வணிகம்’ விருதை வழங்கியது. இது உலகளவில் லைகா மொபைல் வணிகத்தின் வளர்ச்சியை அங்கீகரிக்கிறது. அத்துடன் ‘ஆண்டின் சிறந்த சமூக தொழில்முனைவோர்’ விருதும் கிடைத்தது.

இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது என்று பல உதவிகளைச் செய்து வருகிறார் சுபாஸ்கரன். அவருடைய சமூக சேவைகளைப் பாராட்டி லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் சுபாஷ்கரனுக்கு மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. 

2021ஆம் ஆண்டு சுபாஷ்கரன் கிரிக்கெட்டில் லங்கா பிரீமியர் லீக்கிற்கான யாழ்ப்பாண கிங்ஸின் புதிய உரிமையாளராக அறிவிக்கப்பட்டார். Lyca Kovai Kings என்பது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியில் தமிழ்நாட்டின் கோவை நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் அணியாகும். இந்த அணி லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. 

இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்தனர். மேலும் அறக்கட்டளையின் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு வருகை தந்தனர். அங்கு கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் திருமதி சீதா ரவியிடம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினர்.

லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் இந்த செயலுக்கு, திரை உலகினர் மட்டுமல்லாமல், அவரின் வாசகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...