சர்வதேச குடும்ப தினம் – 2022 செய்திக் கட்டுரை

தனி மரம் தோப்பாகாது என்பார்கள். அதேபோல் தனி மனிதனாக இந்தச் சமுதாயத்தில் யாரும் இருக்க முடியாது. யாரானாலும் ஒரு தாயின் தந்தை யின் அரவணைப்பில்தான் வளர்வார்கள். அப்போதே அவன் தனிமனிதன் இல்லை. ஆனால் அவனுக்கும் ஒரு உறவு தேவைப்படுகிறது. அந்த உறவு தான் மனைவி. கணவன் – மனைவி உறவுக்கு ஒரு பிடிப்பு தேவைப்படு கிறது அந்த உறவுகள்தான் குழந்தைகள். இவர்களையெல்லாம் சேர்த்து தான் குடும்பம் உருவாகிறது. இப்படி பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு சமு தாயம் உருவாகிறது. இப்படிப் பல சமுதாய மக்கள் சேர்ந்துதான் ஒரு நாடு உருவாகிறது. அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் போன்றவை.

சமூகத்தின் முக்கிய அங்கமாக இருப்பது ‘குடும்ப அமைப்பு’ என்பதை அடிப்படையாகக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15-ந் தேதி ‘சர்வ தேச குடும்ப தினம்’ கொண்டாடப்படுகிறது.

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதனின் மனபலமே, மொத்தக் குடும்பத்தையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் அச்சாணி. அதுவே குடும்பத்தின் பலம். வளமான குடும்பமே சமூகத்தின் ஆதாரம். நண்பர்கள், உறவினர்கள் இருந்தாலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருப்பது குடும்பம்தான். 

இந்த நாளைக் கொண்டாடுவதற்கான முக்கிய காரணம், உலகை வடி வமைப்பதில் குடும்பங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் மதிப்புகள் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதாகும்.

1980களில் ஐக்கிய நாடுகள் சபை குடும்பங்கள் தொடர்பான பிரச்சினை களில் கவனம் செலுத்த முடிவு செய்தது. 1983 ஆம் ஆண்டில், சமூக மேம் பாட்டுக்கான ஆணையம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரை ஒரு தீர்மானத்தில், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தியது.

1993 இல், பொதுச் சபை மே 15 ஆம் தேதியை சர்வதேச குடும்ப தினமாக அறிவித்தது.

1993-ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை ‘சர்வதேச குடும்ப தினம்’ தீர்மா னத்தை நிறைவேற்றியது. உலகில் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க் கைத் தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கும் மாறி வரும் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு கருப்பொருளின் நோக்கம் குடும்ப நட்பு, நிலையான நகர்ப் புறக் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவ தாகும்.

குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற் படுத்துவது மற்றும் ஒரு குடும்பத்தை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் மற்ற அனைத்து காரணிகள் பற்றிய புரிதலை அதிகரிப்பதும் இந்த நாளின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

குடும்பங்களைப் பல வழிகளில் பாதிக்கும் பொருளாதார, மக்கள் தொகை மற்றும் சமூக இயக்கவியல் ஆகியவற்றையும் இந்த நாள் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

சர்வதேச குடும்ப தினம் 2022: தீம்

குடும்பங்களின் சர்வதேச தினக் கொண்டாட்டங்களை வழிநடத்தும் ஐக்கிய நாடுகள் சபை, 2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக “குடும்பங்கள் மற்றும் நகரமயமாக்கல்” என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளது. குடும்ப நட்பு, நிலையான நகர்ப்புறக் கொள்கைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

நகரமயமாக்கல் என்ற கருத்து உலகத்தையும் உலகளவில் குடும்பங்களின் நல்வாழ்வையும் வடிவமைக்கிறது. இதன் விளைவாக, நகரமயமாக்கலு டன் ஒத்திசைவான நிலையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது, வள ரும் மற்றும் வளர்ச்சியில் உள்ள  நாடுகளுக்கு உதவும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, குடும்பங்கள், அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக் கொண்டால் மட்டுமே உலகம் வளர்ந்து செழிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!