அன்பின் முகவரி நீயானால் புத்தகம் வெளியீடு

சாம்பவி சங்கர் அவர்கள் எழுதிய அன்பின் முகவரி நீயானால் என்ற புத்தகம் நக்கீரன் இதழின் முதன்மை துணை ஆசிரியர் திரு. ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் புதல்வர் நாடன் சூர்யா அவர்களின் அகில்நிலா பதிப்பகத்தின் சார்பில் இன்று காலை வெளியீடு செய்யப்பட்டது.

வைர வரிகளால் பாடல்களை உருவேற்றி மக்களின் மனதை கொள்ளையடித்த கவிஞர் வைரமுத்து அவர்களின் திருக்கரங்களால் வெளியிட மின்கைத்தடி.காம் இணைய இதழின் பொறுப்பாசிரியரும் எழுத்தாளருமாகிய லதா சரவணன் அவர்கள் பெற்றுகொண்டர்கள்.

அய்யா ஆரூர்தமிழ்நாடன் அவர்கள் எழுத்துலகில் சாதிக்கவேண்டும் என்று முயற்சிக்கும் எழுத்தாளர்களின் ஏணி. தான் மட்டும் சிகரம் ஏறினால் போதாது தன்னைச் சார்ந்தவர்களும் சிகரத்தை நோக்கி வரவேண்டும் என்று அனைவரின் கரம்பற்றி, ‘நானிருக்கிறேன் எழுதுங்கள் இன்னும் உயருங்கள் உங்கள் சிந்தனைகளை தட்டி விடுங்கள் வித்தியாசமான படைப்புக்களை உலகிற்கு அளியுங்கள்…’ என்று ஊக்கப்படுத்தும் கிரியா ஊக்கி.

தம்பி நாடன் சூர்யா அவர்களின் அகில்நிலா பதிப்பகம் மூலம் இன்று சாம்பவி சங்கர் மற்றும் ரஞ்சனி அவர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட்டது. மிகவும் மகிழ்வு. நட்பு சூழ் உலகு இனிக்கிறது. அய்யா தங்களின் சேவை இன்னும் நிறைய இளைய எழுத்தாளர்களுக்கு தேவை. இனிய காலை உதயத்தினை எங்களுக்கு அளித்த சூரியன் நீங்கள்.

‘இன்னும் வளருங்கள் உங்களை போன்ற எழுத்தாளர்கள் இன்னும் இந்த நாட்டிற்கு தேவை. இது போன்ற விழா ஒன்று ஏற்பாடு செய்கிறேன். வாருங்கள்.’ என்று லதா சரவணன் அவர்களுக்கும் சாம்பவி சங்கர் அவர்களுக்கும் அழைப்பு விடுத்தார் கவிஞர் வைரமுத்து.

இனிய நினைவுகளுடன் விழா நிறைவாக நிறைவேறியது…

5 thoughts on “அன்பின் முகவரி நீயானால் புத்தகம் வெளியீடு

  1. புத்தகத்தை கண்டிப்பாக வாங்கி படிக்கிறோம்.மிக்க மகிழ்ச்சி.🙏❤️☺️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!