அன்னையின் அன்பில் – அருணா ஸ்ரீ பிரபாகரன்

வலி தாங்கி
உயிர் தந்தாள்..

இமை தாங்கும் விழிகளாய்
ஒளி தந்தாள்..

நதியோடும் அலை நடுவே
விளையாடும் நீர்க்குழிமியாய்
நமை ஈன்று அன்பின் கடலானாள்..

நினைவில் அகலாத அவள் முகம்
நிலத்தில் இருந்து அகன்றாலும்
அகலாது அந்த நிலவு முகம்..

தன்னலம் காணா ஒரு மனம்..
எந்தாளும் தளிரையே காணும் அந்த மரம்..
களைத்து அலுத்தாலும் காட்டிக் கொள்ளாது..

கண்கள் உறங்கினாலும் அவள் கனவுகளிலும்
பிள்ளையின் நினைவே பெரிதாய் தோன்றும்..
மண்ணில் இருக்கும் வரை மதித்துப் போற்று….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!