நாளை முதல் டாஸ்மாக் விடுமுறை – அரசு உத்தரவு!!

 நாளை முதல் டாஸ்மாக் விடுமுறை – அரசு உத்தரவு!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி வரை தொடர்ந்து கடைகள் பூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் கடந்த வருடம் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தும் நோக்கில் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...