10 பேர் சேர்ந்து அடக்கும் காளையை.. தில்லாக அழைத்து வந்த.. 2 வயது வீர தமிழச்சி.!!

ஜல்லிக்கட்டு காளையை 2 வயது சிறுமி ஒருவர் அழைத்து வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார்.

இதில் 430 மாடுபிடி வீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்கு சொந்தமான காளையை 2வது சிறுமியை தனியாக பயப்படாமல் அழைத்து வந்த புகைப்படம் சமூக வளைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!