வரலாற்றில் இன்று – 18.05.2020 சர்வதேச அருங்காட்சியக தினம்

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ஆம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், அதேபோல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இத்தினம் 1977ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகின்றது.

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. தடுப்பூசி ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் 1998ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.

தடுப்பூசி கண்டுபிடிப்பதன் மூலம் எய்ட்ஸ் ஆபத்தைக் குறைக்க முடியும். இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். எச்.ஐ.வி தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒன்றாக இணைந்து செயல்படும் விஞ்ஞானிகளுக்காவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஹெச்.டி.தேவ கௌடா

ஹெச்.டி.தேவ கௌடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி டொட்டெகௌடா தேவெ கௌடா 1933ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

இவர் இந்தியக் குடியரசின் பிரதமராகவும், கர்நாடக மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.

1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார்.

1999ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கினார்

முக்கிய நிகழ்வுகள்

1929ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி உலகளாவியப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் வெ.இராதாகிருஷ்ணன் சென்னையிலுள்ள தண்டையார்பேட்டையில் பிறந்தார்.

1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.

தமிழின அழிப்பு நாள் : இலங்கையின் வடக்கு மாகாண சபையில் மே 18ஆம் தேதி தமிழின அழிப்பு நாள் என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!