செவிலியர் தின நல்வாழ்த்துகள்

 செவிலியர் தின நல்வாழ்த்துகள்

செவிலியர் தின நல்வாழ்த்துகள்

யாரும் பார்த்துவிடக் கூடாதென்று திரைமறைப்பை வைத்துவிட்டு
அரை மயக்கத்திலிருந்த அவனை கைப்பிடித்து
படுக்கையில் சாய்த்தாள் அவள்…
அவன் காதோரம் ஏதோ பேசிவிட்டு அவன் சம்மதிக்கவே அவன் மேல்சட்டையை கழட்ட தயாரானால் அவள்…
அவனின் மார்பை தழுவி வியர்வை துடைத்து
அவனது கீழாடையையும் கழட்டிவிட்டு தொடையில் வழிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு மீண்டும் காதருகே பேசி அவனை ஆசுவாசபடுத்தினாள் அவள்…
அத்தனையையும் பார்த்துவிட்ட நான் அவளருகே சென்றதும்
“நகருங்க சார் பாதையில நிக்காதிங்க” என்று கொஞ்சம் கோவமாய் சத்தமிட்டுவிட்டு
மீண்டும் அடுத்த படுக்கையில் கிடந்த நோயாளியை அன்போடு கவனித்துக்கொண்டிருந்தால் அந்த #செவிலிப்பெண்….
பெரியார் இவளை பார்க்கவில்லையோ
கடவுள் இல்லை என்று கூறிவிட்டாரே…
முகம் சுழிக்காமல் முகம் பார்த்து பணிவிடை செய்யும் இந்த செவிலிப்பெண் எனக்கு கடவுளாகத்தான் தெரிந்தாள்..

கபி_மோகன்தாஸ்

தமிழக அரசே !

மே – 12 , உலக செவிலியர்கள் தினத்தில் நிரந்தரப் பணியில் தற்காலிக ஊழியர்களாக பணி செய்யும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய !

கொரானா என்னும் வைரஸ் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் , தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணப் பணிகளை செய்துவரும் செவிலியர்களுக்கு எனது இரு கரம் கூப்பி மரியாதை செய்து கொள்கிறேன்.

மத்திய மாநில அரசுகள் செவிலியர்களுக்கு சூடம் ஏற்றுவதும் மலர் தூவுவதும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறுவது அவருக்கு செய்யும் உண்மையான மரியாதை என்று நினைத்துக் கொள்கிறார்கள்…

இச்செயல் அவர்கள் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்து விடாது .

மாறாக நீங்கள் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .

அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் .

கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறும் நீங்கள் அவர்களை ஏன் பணிநிரந்தரம் செய்ய மறுக்கிறீர்கள்….

அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் .

அவர்களுக்கு குடியிருப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இன்று உலக செவிலியர்கள் தினம் !

செவிலியர்கள் வாழ்வில் ஒளி பிறக்குமா ?

மத்திய மாநில அரசுகள் ஒளி ஏற்றுமா செவிலியர்கள் வாழ்க்கையில் ?

தற்பொழுது ஆளும் அரசுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது .

இந்நேரத்தில் இவர்களுக்கு நீங்கள் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

அங்கீகாரம் அளிப்பீர்களா அரசுகளே ?

அன்புடன்
வெண்மணி வரதராஜன் ,
பெரிய வெண்மணி ,
வேப்பூர் ஒன்றியம் ,
குன்னம் சட்டமன்றம் ,
பெரம்பலூர் மாவட்டம் .

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...