மதுக்கடைகளை நிரந்தரமாக – கவிஞர் தாமரை

 மதுக்கடைகளை நிரந்தரமாக  – கவிஞர் தாமரை

மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுங்கள் முதல்வர் எடப்பாடியார் அவர்களே !.

ஏழைத் தாய்மார்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்…

காலில் விழுந்துகூடக் கேட்கிறோம்…

இது காலம் உங்களுக்குக் கொடுத்த அருமையான வாய்ப்பு !.

அரசியல்ரீதியாக நீங்களே நினைத்துப் பார்த்திராத செல்வாக்குப் பெற்றுத் தரும் வாய்ப்பு !.

இன்றிரவு, ஒரே ஒருமுறை, ஏழைத் தாய்மார்கள் வயிறெரிந்து அரற்றும் காணொலிகளைக் காணுங்கள்…

குடிகாரர்களின் கையில் சிக்கிக் கூழாகும் அந்தக் கேட்பாரற்ற குரல்களைக் கொஞ்சம் கேளுங்கள் !.

இந்த இரண்டு நாட்களில் குடிகாரர்களால் நிகழந்த வன்முறை, சீரழிவுகளை எண்ணிப் பாருங்கள் !

குடியால் வரும் வருமானம் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை என்று துணிந்து முடிவெடுங்கள்…

பிறகு பாருங்கள் அதன் பின்விளைவை ! வரலாறு உங்களைத் தூக்கிக் கொண்டாடிவிடும் !

-கவிஞர் தாமரை

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...