உலோகப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும் மண் பாண்டங்கள் அருகிப் போய்விட்டன. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக் கிறார் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் லோகேஷ். இவர் சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலைகள் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். அதே கல்லூரியில், காட்சித் தகவலியல் துறை பட்டயப் படிப்பில் சிறந்த மாணவன் விருதையும் வென்றவர். தமிழில் வெளிவந்த அணு உலை குறித்த ஒரே ஆவணப்படமான உயிர் உலை’யின் இயக்குநர் இவர்தான். தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று ஓவியப் புத்தகமான ‘ஈழம்-87’புத்தகத்தையும் இவர்தான் பதிப்பித்திருக்கிறார். சாலை விபத்தில் மறைந்த நிருபர் ஷாலினியின் கவிதைகளைத் தொகுத்து ‘பாரதி யாழ்’ என்ற அவரது புனைபெயரிலேயே வெளியிட்டுள் ளார். பன்முகத்திறமை கொண்ட இளைஞரான லோகேஷை சந்தித்துப் பேசினோம்.…
Category: மறக்க முடியுமா
மறக்கமுடியாத இசையமைப்பாளர் கோவர்த்தனம்
ஜெமினி கணேசன் நடித்த பூவும் பொட்டும் படத்தில் நாதஸ்வர ஓசையிலே… ஜெயசங்கர் நடித்த பட்டணத்தில் பூதம் படத்தில் அந்த சிவகாமி மகனிடம்… ஆகிய பிரபலமான பாடல்களை இசையமைத்தவர் ஆர். கோவர்த்தனம். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் கோவர்த்தனம். பெங்களூரில் வசித்து வந்தார். தந்தை…
உலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் (மார்ச் 14) நினைவு
உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் (மார்ச்14) காலமானார். அவர் பற்றிய செய்தி.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற ஒப்பற்ற விஞ்ஞானிகளுக்கு நிகராக புகழப் பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை ஆரம்பம் முதலே முள் படுக்கையாகவே இருந்தது. நரம்பியல் நோயால்…
மின்னி மறைந்த நட்சத்திரம் சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒருவர் எப்படி அறிமுகம் ஆகிவிடுகிறார் களோ அந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடும். அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்து போனார். அவரது உடல் வனப்பும் கவர்ச்சியும் போதைக் கண்களும் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு…
குஞ்சரம்மாள் எனும் குணக்குன்று
சென்னை வெள்ளம் வந்தபோது வீடிழந்த மக்களுக்கு சில நல்ல உள்ளங்களால் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதைப் பார்த்தோம். பிறகு தமிழகப் புயல் நிகழ்ந்தபோதும் பார்த்தோம். அப்போதெல்லாம் யாரோ எவரோ உணவு தந்து பசி யாற்றினார்கள். கடந்த ஆண்டு கொரோனா கோரத் தாண்ட வத்தில்…
சுதந்திரப்போராட்ட வீராங்கனை தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாள் நினைவுநாள்
அன்றைய தென்னாற்காடு மாவட்டம் கடலூரில் முது நகரில் சுண்ணாம்புக்கார தெருவில் 1890ம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலை. இவருடைய பெற்றோர் முத்துமணிபடையாட்சி- அம்மாக்கண்ணு. லாடம் கட்டுவது, குதிரை வண்டிகளை வாடகைக்கு விடுவது ஆகியவை முத்துமணியின் தொழில். நடுத்தரமான சொத்துக்களை கொண்டிருந்த முத்துமணி…
பாடகர் சித் ஶ்ரீராம் குரலும் பாடல்களும்
திரைப்பட, கர்நாடக இசைப் பாடகர் சித் ஶ்ரீராம் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா விலுள்ள கலிபோர்னியாவில் வளர்ந்தவர். இவருக்கு ஒரு வயதாக இருந்த பொழுது இவரது பெற்றோர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் சென்றனர். ப்ரிமவுண்ட்டில் வளர்ந்த இவரின் இசைத்திறமை இவரது தாயாரால்…
ஓவியம் மற்றும் தமிழுக்காக வாழ்வையே அர்ப்பணித்த ஓவியர் வீர சந்தானம்
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றிய ஓவியர் வீர சந்தானம், தமிழ் பண்பாட்டின் ஆழத்திலிருந்து ரத்தமும் சதையுமாக வரைந்த ஓவியங்களால் எட்டுத்திக்கும் கொடிகட்டிப் பறந்தவர். ஓவியத் துறை யையும் கடந்து ஆடை வடிவமைப்பாளர், தமிழ் உணர்வாளர், நடிகர் என பன்முகம்…
தேவதாசி வரலாறு கூறும் உண்மை என்ன?
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. கோவிலுக்கு தேவதாசியாகப் பணி செய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களைத் தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரி களாகச் செயல்பட வேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும்…
விக்ரம் நடித்த ‘மகான்’ படத்துக்கு தமிழருவி மணியன் கண்டனம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’ இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இந்தப் படம் காந்தியத்தைக் கொச்சைப்படுத்தப்படுவதாக, அறிவார்ந்த பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். இந்தப் படம் சார்ந்த இயக்குநரோ, தங்கள் பங்களிப்பைத் தந்த…
