இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஸவை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி வவுனியா பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டது. நேற்று (05.04.2022) காலை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியால யத் திற்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது கண்டி வீதியை அடைந்து, ஹொரவப்பொத்தானை வீதியூடாக பஜார் வீதி சென்று பழைய பேரூந்து நிலையத்தை அடைந் தது.இதன்போது மணிக்கூட்டு கோபுர சந்தி மற்றும் பழைய பேருந்து நிலையம் என்பவற்றுக்கு முன் னால் வீதியை […]Read More
உலோகப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும் மண் பாண்டங்கள் அருகிப் போய்விட்டன. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக் கிறார் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் லோகேஷ். இவர் சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலைகள் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். அதே கல்லூரியில், காட்சித் தகவலியல் துறை பட்டயப் படிப்பில் சிறந்த மாணவன் விருதையும் வென்றவர். தமிழில் வெளிவந்த அணு உலை குறித்த ஒரே ஆவணப்படமான உயிர் உலை’யின் இயக்குநர் இவர்தான். தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று ஓவியப் புத்தகமான ‘ஈழம்-87’புத்தகத்தையும் இவர்தான் பதிப்பித்திருக்கிறார். சாலை விபத்தில் மறைந்த நிருபர் ஷாலினியின் கவிதைகளைத் தொகுத்து ‘பாரதி யாழ்’ என்ற அவரது புனைபெயரிலேயே வெளியிட்டுள் ளார். பன்முகத்திறமை கொண்ட இளைஞரான லோகேஷை சந்தித்துப் பேசினோம். “மண் பாண்டம் உள்பட மரபுத் தொழில்களை மீட்க பிரத்யேகமான கல்வி முறை, வியாபார யுக்திகள் தேவைப்படுகிறது. மண்பாண்டத் தொழிலை பயிற்றுவிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. மண்பாண்டம் உள்ளிட்ட அனைத்து மரபுத் தொழில்களுமே ஏதோ ஒரு சாதிய அடிப்படையி லான தொழிலாக இருக்கும். குறிப்பாக மண்பாண்டத் தொழிலை குயவர் கள் அல்லது குலாலர் என்கிற இனத்தவர் செய்து வருகின்றனர். மண் பாண்டத் தொழிலை பிற சாதியினர் கற்பதில் மனத்தடை இந்தக் காலத்தி லும் இருக்கிறது. மனித நாகரிகத்தின் தொட்டில்களில் வளர்ந்த கலை, இன்று சாதிய வேறு பாடுகளால் அழியும் நிலைக்குப் போய்விட்டது. சாதியைக் கடந்த தொழில்களே நிறுவனமயமாக்கப்பட்டு சிறப்பான வளர்ச்சிகளைப் பெற்றிருக்கிறது என்பது யதார்த்தம். மண்பாண்டத் தொழிலும் இத்தகைய வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் இந்த மனத்தடை முற்றிலுமாக ஒழிய வேண்டும். இப்போது மண் பாண்டக் […]Read More
ஜெமினி கணேசன் நடித்த பூவும் பொட்டும் படத்தில் நாதஸ்வர ஓசையிலே… ஜெயசங்கர் நடித்த பட்டணத்தில் பூதம் படத்தில் அந்த சிவகாமி மகனிடம்… ஆகிய பிரபலமான பாடல்களை இசையமைத்தவர் ஆர். கோவர்த்தனம். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் கோவர்த்தனம். பெங்களூரில் வசித்து வந்தார். தந்தை பெயர் இராமச்சந்திர செட்டியார். பிரபலமான இசையமைப்பாளர் கோவர்த்தனத்தின் சகோதரர் ஆர். சுதர்சனம் . தந்தையும் கர்நாடக இசை அறிந்தவர். தந்தையிடமும், சகோதரரிடமும் கோவர்த்தனம் கர்நாடக இசையைப் பயின்றார். சென்னைக்கு வந்து தமிழும் கற்றுக் கொண்டார். […]Read More
உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் (மார்ச்14) காலமானார். அவர் பற்றிய செய்தி.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற ஒப்பற்ற விஞ்ஞானிகளுக்கு நிகராக புகழப் பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை ஆரம்பம் முதலே முள் படுக்கையாகவே இருந்தது. நரம்பியல் நோயால் உடல் அளவில் முடங்கினாலும், உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருந்து ஒட்டுமொத்த விஞ்ஞான உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். “கை கால்கள் செயல்படாது. சக்கர நாற்காலியிலேயே வாழ வேண்டும். விரைவில் மரணம் ஏற்படும்” ஸ்டீபன் […]Read More
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒருவர் எப்படி அறிமுகம் ஆகிவிடுகிறார் களோ அந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடும். அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்து போனார். அவரது உடல் வனப்பும் கவர்ச்சியும் போதைக் கண்களும் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு சில்க் ஸ்மிதாவின் ஈர மனசும், தங்க குணமும் தெரிந்திருக்க நியாயமில்லைதான்! விஜயலட்சுமி என்கிற சில்க்கின் இளம் வயதிலேயே வீட்டில் வறுமை வந்து உட்கார்ந்து கொண்டது. பசி ஒரு பக்கம், மாமியார் கொடுமை ஒரு பக்கம் […]Read More
சென்னை வெள்ளம் வந்தபோது வீடிழந்த மக்களுக்கு சில நல்ல உள்ளங்களால் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதைப் பார்த்தோம். பிறகு தமிழகப் புயல் நிகழ்ந்தபோதும் பார்த்தோம். அப்போதெல்லாம் யாரோ எவரோ உணவு தந்து பசி யாற்றினார்கள். கடந்த ஆண்டு கொரோனா கோரத் தாண்ட வத்தில் வேலை இல்லாமல் உணவு இல்லாமல் தவித்தவர்களுக்கும் உதவிக் கரங் களை நீட்டிய வர்களைப் பார்த்திருக்கிறோம். தற்போது ரசியா-உக்ரைன் போரின்போது உணவு கிடைக்காமல் தவித்தவர் களுக்கு கஞ்சி உணவு வழங்கப்படுவதைக் கேள்விப்படுகிறோம். ஆனால் தமிழகத்தில் நிகழ்ந்த […]Read More
அன்றைய தென்னாற்காடு மாவட்டம் கடலூரில் முது நகரில் சுண்ணாம்புக்கார தெருவில் 1890ம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலை. இவருடைய பெற்றோர் முத்துமணிபடையாட்சி- அம்மாக்கண்ணு. லாடம் கட்டுவது, குதிரை வண்டிகளை வாடகைக்கு விடுவது ஆகியவை முத்துமணியின் தொழில். நடுத்தரமான சொத்துக்களை கொண்டிருந்த முத்துமணி தம்மிடம் லாடம் கட்டுவது உள்ளிட்டவை மூலம் பழகிய வெள்ளைக்காரர்களிடம் இருந்து ஆங்கிலம் பேசுவதற்கு பழகி இருந்தார். இவருடைய முதல் மகன் ராஜி, இரண்டாவது மகள் அஞ்சலை, மூன்றாவது ராமசாமி, நான்காவது மகன் பெயர் தெரியவில்லை. […]Read More
திரைப்பட, கர்நாடக இசைப் பாடகர் சித் ஶ்ரீராம் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா விலுள்ள கலிபோர்னியாவில் வளர்ந்தவர். இவருக்கு ஒரு வயதாக இருந்த பொழுது இவரது பெற்றோர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் சென்றனர். ப்ரிமவுண்ட்டில் வளர்ந்த இவரின் இசைத்திறமை இவரது தாயாரால் பேணி வளர்க்கப்பட்டது. இவரது தாயார் லதா ஸ்ரீராம் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஒரு கர்நாடக இசை ஆசிரியர். இவர் அதே நேரத்தில் ரிதம் அண்ட் புளூஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்தார். 2008ஆம் […]Read More
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றிய ஓவியர் வீர சந்தானம், தமிழ் பண்பாட்டின் ஆழத்திலிருந்து ரத்தமும் சதையுமாக வரைந்த ஓவியங்களால் எட்டுத்திக்கும் கொடிகட்டிப் பறந்தவர். ஓவியத் துறை யையும் கடந்து ஆடை வடிவமைப்பாளர், தமிழ் உணர்வாளர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கினார். ஆடை வடிவமைப்புத் துறையில் இவர் தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் உணர்வாளரான இவர், பல்வேறு போராட் டங்களில் கலந்துகொண்டுள்ளார். பாரிசில் ஒரு ஓவியருக்குக் கிடைக்கும் வாழ்க்கையும் பாராட்டுதலும் உலகில் வேறு எங்கும் […]Read More
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. கோவிலுக்கு தேவதாசியாகப் பணி செய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களைத் தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரி களாகச் செயல்பட வேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது. டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லா மல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!