சர்வதேச பலூன் திருவிழா 10-ந் தேதி சென்னையிலும் தொடங்குகிறது..!

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, பொள்ளாச்சி, மதுரையில் சர்வதேச பலூன் திருவிழா 10-ந் தேதி தொடங்குகிறது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 10-வது…

ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு நிறைவு..!

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது . தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது இந்த…

HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை..!

HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை  என மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் பரவிவரும் HMPV என்ற புதிய வைரஸ் தொற்று சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவிய…

‘ஜஸ்டின் ட்ரூடோ’ ராஜினாமா..!

கனடா நாட்டின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கனடாவில் வரும் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் நெருக்கடி…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பகல் பத்துதிருவிழா நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தநிலையில் வருகிற 10-ந்…

ஜார்கண்டில் பள்ளிகளை 13-ந் தேதிவரை மூட உத்தரவு..!

ஜார்கண்ட் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனி பெய்து வருகிறது. டெல்லியில், எதுவுமே பார்க்க முடியாத அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், ரெயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன.…

டெல்லியில் அடர்பனியான சூழலால் ரயில்கள் காலதாமதம்..!

டெல்லியில் அடர்பனியான சூழலால் பல ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் அடர்பனியான சூழல் நிலவுகிறது. பல்வேறு இடங்களிலும் பனி மூட்டம் காணப்படுகிறது. கடும் பனியால் குளிரான காலநிலையும் உள்ளது. இதனால், காலையில் வாகனங்களில் செல்லும்…

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு..!

தமிழ் நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியானது துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய,…

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்..!

பொங்கல் பண்டிகையையொட்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பது வழக்கம். இந்த…

‘பெஞ்சல்’ புயலை இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு..!

பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம், சீரமைப்பு பணிக்கு, பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் பயன்படுத்த முடியும். கடந்த ஆண்டு நவ., மாதம் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், அம்மாதம் 30ம் தேதி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!