Tags :ஷெண்பா

தொடர்

நீயெனதின்னுயிர் – 12 – ஷெண்பா

ஹாஸ்டல் மொத்தமும் ஆரவாரமும், அமர்க்களமுமாக இருந்தது. தங்களது படிப்பை நல்லபடியாக முடித்த திருப்தியுடன், தங்களது குடும்பத்தினரை மீண்டும் பார்க்கப் போகும் சந்தோஷமும் இருந்தாலும், அனைவரின் மனத்திலும் தோழிகளைப் பிரியப் போகும் கவலையில் கண்கள் கசிந்தன. தோழிகளிடமும், ஹாஸ்டல் வாடர்ன், வேலை செய்பவர்கள் என அனைவரிடமும் பிரியா விடைபெற்றுக் கிளம்பிய மாணவிகள், பேருந்து நிலையத்திற்கும், இரயில் நிலையத்திற்கும் கல்லூரியின் வாகனத்திலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். பொழுது மெல்லப் புலர ஆரம்பித்தது. அந்த விடியலைப் போலவே தங்களது வாழ்க்கையும், புத்துணர்ச்சியுடன் மலரும் […]Read More

தொடர்

நீயெனதின்னுயிர் – 11 – ஷெண்பா

11 அதிகாலை ஆதவனின் பொன்னிறக் கதிர்கள் ஜன்னலருகில் நின்றிருந்தவளின் மீது பட்டு, இளமஞ்சள் நிற அழகியைப் பொன்னிறத்தில் உருமாற்ற, பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. முகத்திற்கு நேராக தனது வலது கரத்தை உயர்த்திப் பார்த்தவளின் கன்னங்கள், செம்மை நிறத்தைப் பிரதிபலித்தது. உள்ளம், முன் இரவில் அவனது ஸ்பரிசத்தால் ஏற்பட்ட அதிர்வை நினைத்து மதிமயங்க, முகமோ கனிவுடன் இளகியது. அவனது கையணைப்பில் இருந்த கரத்தை, மறுகையால் மெல்லத் தடவிக் கொடுத்தாள். இறக்கை முளைத்த காதல் மனம், அடங்காமல் கட்டவிழத் துவங்கிய நேரத்தில், […]Read More

தொடர்

நீயெனதின்னுயிர் – 10 – ஷெண்பா

10 ஷவரில் நனைந்துகொண்டிருந்த விக்ரமின் மனம் முழுவதும் கோபமும், ஆத்திரமும் நிறைந்திருந்தது. ‘தான் அவளருகிலேயே இருந்தும், இத்தகைய நிலையை ஏற்பட விட்டுவிட்டோமே’ என்ற இயலாமையில், தன் மீதே அவனுக்குக் கோபம் எழுந்தது. கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்த அந்த நிகழ்வு, இப்போதும் அவனது உடலை அதிரச் செய்தது. ராகவுடன் பேசிக்கொண்டிருந்த விக்ரம், தங்களுக்குப் பக்கவாட்டில் வந்து நின்ற பைக்கில் இருந்தவர்கள் பேசியதைக் கேட்டு, அவர்கள், “அதோ!” என்று வைஷாலி இருந்த பக்கமாகக் கைகாட்டிவிட்டு வேகமாகக் கிளம்பினர். […]Read More

தொடர்

நீயெனதின்னுயிர் – 9 – ஷெண்பா

9 கடுகடுத்த முகத்துடன் ஹோட்டலின் உள்ளறையிலிருந்து வெளியே வந்த ராகவ், பெண்களின் நகையொலி கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே அமர்ந்திருந்த மூவரையும் கண்டவன், சப்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட எண்ணினான். ஆனால், அவனைப் பார்த்துவிட்ட சீமா, கையசைத்து நலம் விசாரிக்க, வேறு வழியின்றி அவர்களருகில் சென்றான். “ஹலோ மேடம்! நல்லாயிருக்கேன்” என்றபிறகு, அவளது நலத்தையும் விசாரித்துக்கொண்டான். “ஹலோ சார்!” என்றவனுக்கு வெறும் தலையசைப்பை மட்டுமே பதிலாக்கினான் விக்ரம். ராகவின் நிலையோ தர்மசங்கடமாக இருந்தது. நிற்கவும் முடியாமல், செல்லவும் முடியாமல் […]Read More

தொடர்

நீயெனதின்னுயிர் – 8 – ஷெண்பா

ஒரு நிலைக்கு மேல் தாள முடியாமல், கோபத்துடன் ஹோம் தியேட்டர் இருந்த அறைக்குள் நுழைந்த சீமா, இரு காதுகளையும் பொத்திக்கொண்டாள். “விக்ரம்! சிஸ்டம் வால்யூமை கம்மி பண்ணு; என் காது வலிக்குது. எனக்கு ஹாலில் உட்காரவே முடியலை; தலைவலி வந்திடும் போல இருக்கு” என்று ஏறக்குறைய கத்தினாள். அதைச் சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல், கைகளை பின்னந்தலையில் கோர்த்துக்கொண்டு, ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்திருந்தான் விக்ரம். கோபத்துடன் மியூசிக் சிஸ்டத்தின் ஃப்ளக்கைப் பிடுங்கி எறிந்தாள் சீமா. சப்தம் நின்று […]Read More

தொடர்

நீயெனதின்னுயிர் – 7 – ஷெண்பா

7 “வரவர உன்னோட அலம்பலுக்கு அளவே இல்லாமல் போச்சு ஜோ! இப்படி உடம்பை வருத்திகிட்டு என்னைப் பார்க்க வான்னு, எந்த சாமிடீ சொல்லியிருக்கு? தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோயில் இருக்கு; அதை விட்டுட்டு, இவ்வளவு தூரம் வரணுமா?” திட்டிக் கொண்டே, ஜோதியுடன் சதுர்ஷிரிங்கி மலைக் கோவிலின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள் வைஷாலி. “உன்னை மாதிரியே இந்த கணேஷ்ஜியும் எனக்கு ப்ரெண்ட். நானும், அவரும் முதன்முதலில் இந்தக் கோவிலில்தான் சந்திச்சோம். உனக்குத் தெரியும் தானே!” என்ற ஜோதியின் முகம், […]Read More

தொடர்

நீயெனதின்னுயிர் – 6 – ஷெண்பா

6 ‘இந்த ஜோதியை எப்படிச் சமாளிப்பது?’ என்ற யோசனையுனே இருந்தவள், விக்ரமின் பேச்சைக் கவனிக்கவில்லை. தனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிந்தனையில் இருப்பவளைப் பார்த்துவிட்டு, காரை ஓரமாக நிறுத்தினான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தும் கவனமில்லாமல் இருந்தவளை, “வைஷாலி!” என்றபடி அவளது கையைப் பற்றி, லேசாக உலுக்கினான். “ஹாங்!” என்றவள், கனவிலிருந்து விழித்தெழுபவளைப் போல, திடுக்கிட்டுத் திரும்பினாள். “என்ன ஆச்சு? ஏன் இப்படித் தன்னை மறந்து உட்கார்ந்திருக்க?” “ஒண்ணுமில்லை சார்…” என்று சிரித்து மழுப்பினாள் அவள். “என்னிடம் […]Read More

தொடர்

நீயெனதின்னுயிர் – 5 – ஷெண்பா

5 சனிக்கிழமை கல்லூரியின் விடுமுறை தினமாதலால், வைஷாலி ஹாஸ்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அப்போது, வைப்ரேஷன் மோடிலிருந்த அவளது செல்போன் சப்தமெழுப்ப திரும்பிப் பார்த்தாள். விக்ரமின் மொபைல் நம்பர் தெரியவும்… அதை எடுத்து, “ஹலோ சார்!” என்றாள். “ஹாய் வைஷாலி! எப்படியிருக்க? ஸ்டடீஸெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?” “நல்லாயிருக்கேன் சார். ஃபைனல் எக்ஸாம்ஸ் வருதில்லையா? அதான், முழுமூச்சாய் படிப்பில் இறங்கியாச்சு. சண்டே மட்டும், அரை நாள் அரட்டைக்குன்னு ஒதுக்கிட்டேன்” என்றவள், சிரிக்க ஆரம்பித்தாள். ”வெல்! அப்போ, […]Read More

தொடர்

நீயெனதின்னுயிர் – 4 – ஷெண்பா

4 ஒரு மாதத்திற்குப் பிறகு… அந்தச் சனிக்கிழமையில் விக்ரமின் கைப்பேசி ஒலித்தது. “ஹலோ சார்! குட்மார்னிங்.” “ஹாய் மிஸ்.வைஷாலி! என்ன காலையிலேயே என் ஞாபகம்?” என்று  சிரிப்புடன் கேட்டான் விக்ரம். “ஸ்டூடண்ட்ஸ் சார்பாக உங்களுக்கு, எங்களோட நன்றியைச் சொல்லணும். உங்க செகரெட்டரிகிட்ட சொல்லி, உங்களுக்கு எப்போ வசதிப்படும், ஒரு சின்ன ஃபங்ஷன் வைக்கணும்னும் கேட்டேன். அவர் இப்போதைக்கு முடியாது; நீங்க ரொம்ப பிஸின்னு சொல்லிட்டார். சரி சார்! எந்த ஒரு அங்கீகாரமும், சரியான நேரத்தில் கிடைத்தால் தானே […]Read More

தொடர்

நீயெனதின்னுயிர் – 3 – ஷெண்பா

“இளம் தொழில் அதிபரின் காதல் அரங்கேற்றம்… இளம் பெண்களின் கனவுக் காதலன். நான்கே ஆண்டுகளில் தொழில் சாம்ராஜியத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த, செந்தளிர் குழுமத்தின் உரிமையாளர் விக்ரம் குமார் சௌத்ரியின் காதல் லீலைகள். இது உண்மையா? அல்லது எப்போதும் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள, அவர் செய்யும் தந்திரமா?” கல்லூரியை விட்டு வரும்போதே, ஹாஸ்ட்டலின் விசிட்டர்ஸ் அறையிலிருந்த செய்தித்தாளைக் கையோடு கொண்டு வந்திருந்த ராகினி, முதல் பக்கத்திலிருந்த சூடானச் செய்தியைப் பார்த்ததும், அதை வைஷாலியின் காதில் விழும்படி […]Read More