ஜூலை 4, 5-ம் தேதிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்​கான சிறப்பு ‘டெட்’ தேர்வு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்​கான சிறப்பு ‘டெட்’ தேர்வு ஜூலை மாதம் 4, 5-ம் தேதி​களில் நடை​பெற உள்​ள​தாக டிஆர்பி அறி​வித்​துள்​ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் ஆசிரிய​ராகப் பணி​யாற்​ற​வும், பதவி உயர்வு பெற​வும், ஆசிரியர் தகு​தித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறு​வது கட்​டா​யமாகும்.இதற்காக தமிழகத்தில் 4 மாதங்​களுக்கு ஒரு முறை ஆண்​டுக்கு 3 சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்​தப்​படும். 2026-ம் ஆண்​டுக்​கான தேர்​வுகள் ஜனவரி, ஜூலை, டிசம்​பர் மாதங்​களில் நடை​பெறுகிறது. அதன்​படி முதல் சிறப்பு ‘டெட்’ தேர்​வுக்​கான தேதியை டிஆர்​பி அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறியிருப்பதாவது: பள்ளி ஆசிரியர்​களுக்​கான டெட்’ தேர்​வு​கள் ஜூலை 4, 5-ம் தேதி​களில் (முதல்​தாள், இரண்​டாம் தாள்) நடை​பெறும். இந்த தேர்​வுக்கு பிப்​.18 முதல் ஏப்​.10-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்.

பதிவேற்​றம் செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​களில் ஏப்​.11 முதல் 13-ம் தேதி வரை திருத்​தங்​களை மேற் கொள்​ளலாம். மேலும் தகவல்​களுக்கு டிஆர்​பி​யின் https://www.trb.tn.gov.in/ எனும் இணை​யதளத்​தில் தொடர்பு கொள்​ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!