இன்று த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை

சென்னையில் உள்ள தவெக தலைமை நிலைய செயலகத்தில், இன்று காலை இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் தி.மு.க., அ.தி.மு.க.வைத்தொடர்ந்து த.வெ.க. சார்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அருண்ராஜ், ராஜ்மோகன் என மொத்தம் 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழுவை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள். இந்த குழு, 20ஆம் தேதி (இன்று) அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தேர்தல் அறிக்கை உருவாக உள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்”என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!