சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கடந்த 3-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சத்துணவு ஊழியர்கள் இடம் பெறவில்லை. இந்தநிலையில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்தது.

இந்த நிலையில், சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இயக்குனர் சங்கீதா, இணை இயக்குனர் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!