வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப்பெருவிழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள். இதனால் பொதுமக்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
![]()
இதுகுறித்து திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரத்தில் இருந்து செப்டம்பர் 8-ந்தேதி காலை 9.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-நாகப்பட்டினம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06133) அதே நாள் மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரெயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து அதே நாளில் மதியம் 1.20 மணிக்கு புறப்படும் நாகப்பட்டினம்-விழுப்புரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06131) மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இந்த ரெயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுக சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை சந்திப்பு, பேரளம் சந்திப்பு, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
