பராமரிப்பு பணி காரணமாக மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரையில் (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று காலை 8.05 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும், மறுமாாக்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.