தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெரு மாள் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மக விழாவும், ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடக்கும். கும்பகோணத்தில் உள்ள மகாமக குளக்கரையில் மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக நடப்பது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசி மக விழா கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி 12-ந் தேதி (புதன்கிழமை) மகாமக குளத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு வருகிற 12-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்ட வரும் 29-ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.