வரலாற்றில் இன்று (பிப்ரவரி 22)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 22 (February 22) கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது.

1371 – இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார்.

1495 – பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார்.

1651 – செருமனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1658 – இடச்சுக்காரரினால் இலங்கையின் மன்னார் நகரம் கைப்பற்றப்பட்டது.[1][2]

1797 – பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பு வேல்சின் பிசுகார்டு நகரில் பிரெஞ்சுப் படைகளால் மேற்கொள்ளப்பட்டது.

1819 – எசுப்பானியா புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.

1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.

1848 – பாரிசில் லூயி பிலிப் மன்னனுக்கெதிரான பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.

1853 – வாசிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் மிசோரி, செயின்ட் லூயிசில் ஆரம்பிக்கப்பட்டது.

1862 – ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத்தலைவராக அதிகாரபூர்வமாக வர்ஜீனியா, ரிச்மண்ட் நகரில் பொறுப்பேற்றார்.

1882 – சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.

1889 – அமெரிக்க அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மொன்ட்டானா, வாசிங்டன் ஆகியவற்றை அமெரிக்காவின் மாநிலங்களாக அறிவிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார்.

1899 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக முதன் முதலாகத் தாக்குதலைத் தொடுத்தன. ஆனாலும், மணிலா நகரை அமெரிக்கர்களிடம் இருந்து கைப்பற்றத் தவறியது.

1907 – பேடன் பவல் முதலாவது சாரணிய முகாமை இங்கிலாந்தில் பிரவுன்சி என்ற இடத்தில் அமைத்தார்.

1909 – கனெடிக்கட் கப்பலின் தலைமையிலான 16 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தமது உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பின.

1921 – உருசியப் படையினர் மங்கோலியாவில் இருந்து சீனர்களை வெளியேற்றி, போகடு கானை மங்கோலியாவின் பேரரசனாக அறிவித்தனர்.

1924 – கால்வின் கூலிஜ் வெள்ளை மாளிகையில் இருந்து வானொலி மூலம் உரையாற்றிய முதலாவது அமெரிக்கத் தலைவர் ஆனார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியில் சோபி சோல் உட்பட வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் தவறுதலாக நான்கு இடச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800 இற்கும் அதிகமானோர் இறந்தனர்.

1958 – எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.

1961 – உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.

1969 – பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.

1972 – அதிகாரபூர்வ ஐரியக் குடியரசு இராணுவம் இங்கிலாந்து, ஆம்ப்சயரில் உள்ள ஆல்டர்சொட் இராணுவப் பாசறையில் வாகனக் குண்டுவெடிப்பை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டு, 19 பேர் காயமடைந்தனர்.

1974 – பாக்கித்தான், லாகூரில், நடைபெற்ற இசுலாமியக் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் 37 நாடுகளும், 22 அரசுத்தலைவர்களும் பங்குபற்றினர். இம்மாநாட்டில் வங்காளதேசம் அங்கீகரிக்கப்பட்டது.

1974 – ரிச்சார்ட் நிக்சனைப் படுகொலை செய்யும் நோக்கில் வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக வாசிங்டன் பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் ஒன்றைக் கடத்த முற்பட்ட சாமுவேல் பிக் என்பவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.[3]

1979 – சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1986 – பிலிப்பீன்சில் மக்கள் புரட்சி வெடித்தது.

1997 – டோலி என்ற ஆடு வெற்றிகரமாக படியெடுக்கப்பட்டதாக பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.

2002 – அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாசு சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.

2002 – இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கையெழுத்திடப்பட்டது.

2005 – ஈரானில் கெர்மான் மாகாணத்தில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 612 பேர் உயிரிழந்தனர்.

2006 – பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.

2011 – நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச்சில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 185 பேர் உயிரிழந்தனர்.

2012 – அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 51 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.

2014 – உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கெதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 328–0 வாக்குகளால் வெற்றியடைந்தது.

2015 – பத்மா நதியில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1302 – ஜெஜீன் கான், சீன யுவான் வம்சப் பேரரசர் (இ. 1323)

1732 – சியார்ச் வாசிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1799)

1785 – சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1845)

1796 – அடால்ப் குவெட்லெட், பெல்சிய கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1874)

1810 – பிரடெரிக் சொப்பின், போலந்து இசையமைப்பாளர் (இ. 1849)

1824 – பியேர் ஜான்சென், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)

1857 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தை ஆரம்பித்த ஆங்கிலேயர் (இ. 1941)

1857 – ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1894)

1879 – ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், தென்மார்க்கு வேதியியலாளர் (இ. 1947)

1892 – எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய், அமெரிக்கக் கவிஞர் (இ. 1950)

1898 – தில்லையாடி வள்ளியம்மை, இந்திய விடுதலைப் போராட்டப் பெண் போராளி (இ. 1914)

1923 – சுப்பையா சர்வானந்தா, இலங்கைத் தமிழ் நீதிபதி, வழக்கறிஞர், மேல்மாகாணத்தின் 1வது ஆளுநர் (இ. 2007)

1932 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (இ. 2009)

1936 – சாலமன் பாப்பையா, தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர்

1951 – சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர்

1953 – ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன், தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1893)

1956 – அசோக் அமிர்தராஜ், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர், டென்னிசு வீரர்

1962 – இசுடீவ் இர்வின், ஆத்தியேலிய விலங்கியலாலர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் (இ. 2006)

1963 – விஜய் சிங், பிஜி-அமெரிக்க குழிப்பந்தாட்ட வீரர்

1974 – ஜேம்ஸ் பிளண்ட், ஆங்கிலேயப் பாடகர், கித்தார் இசைக்கலைஞர்

1975 – டுரூ பேரிமோர், அமெரிக்க நடிகை

இறப்புகள்

1072 – பீட்டர் தமியான், இத்தாலியப் புனிதர்

1512 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1454)

1600 – என்றிக்கே என்றீக்கசு, போர்த்துக்கீச இயேசு சபை போதகர், மதப்பரப்புனர் (பி. 1520)

1913 – பேர்டினண்ட் டி சோசர், சுவிட்சர்லாந்து மொழியியலாளர் (பி. 1857)

1943 – சோபி சோல், செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1921)

1944 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (பி. 1869)

1958 – அபுல் கலாம் ஆசாத், இந்திய அரசியல்வாதி (பி. 1888)

1987 – அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர், புகைப்படக் கலைஞர் (பி. 1928)

2001 – வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1925)

2006 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி. 1915)

2012 – மரீ கோல்வின், அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1956)

2012 – இரெமி ஓக்லிக்கு, பிரான்சிய ஊடகவியலாளர் (பி. 1983)

2019 – கருணா, ஈழத்து-கனடிய ஓவியர்

சிறப்பு நாள்

விடுதலை நாள் (செயிண்ட் லூசியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!