வரலாற்றில் இன்று (பிப்ரவரி 18)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 18 (February 18) கிரிகோரியன் ஆண்டின் 49 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 316 (நெட்டாண்டுகளில் 317) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1229 – 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு எருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார்.

1332 – எத்தியோப்பியப் பேரரசர் அம்தா முதலாம் சேயோன் தெற்கு முசுலிம் மாகாணங்களில் தனது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

1478 – இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னனுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவரது மூத்த தமையன் கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு இலண்டன் கோபுரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1637 – எண்பதாண்டுப் போர்: இங்கிலாந்தின் கோர்ன்வால் கரையில், எசுப்பானியக் கடற்படைக் கப்பல்கள் மிக முக்கியமான ஆங்கிலோ-டச்சு வணிகக் கப்பல்கள் 44 ஐ வழிமறித்துத் தாக்கி அவற்றில் இருபதைக் கைப்பற்றின. ஏனையவை அழிக்கப்பட்டன.

1745 – மத்திய சாவகத்தில் சுராகார்த்தா நகரம் உருவாக்கப்பட்டு, சுராகார்த்தா சுல்தானகத்தின் தலைநகராக்கப்பட்டது.

1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ரால்ஃப் அபகுரொம்பி தலைமையில் 18 பிரித்தானியக் கப்பல்கள் திரினிடாடை ஊடுருவின.

1832 – யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிவெள்ளி தோன்றியது.[1]

1861 – இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1861 – மான்ட்கமரியில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் சேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.

1873 – பல்கேரியப் புரட்சித் தலைவர் வசீல் லெவ்சுக்கி சோஃபியா நகரில் உதுமானியர்களால் தூக்கிலிடப்பட்டார்.

1911 – முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இடம்பெற்றது. இந்தியாவின் அலகாபாத் நகரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள நைனி நகருக்கு 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன.

1930 – சனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் கிளைட் டோம்பா புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.

1932 – சீனக் குடியரசிடம் இருந்து மஞ்சுகோவின் விடுதலையை சப்பான் மன்னர் அறிவித்தார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் யப்பானிய இராணுவம் சப்பானிய விரோத சீனர்களைத் தேடி அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனிப் படையினர் வெள்ளை ரோசா இயக்கத்தினரைக் கைது செய்தனர்.

1946 – மும்பைத் துறைமுகத்தில் இடம்பெற்ற கடற்படை மாலுமிகளின் பம்பாய் கலகம் பிரித்தானிய இந்தியாவின் ஏனைய மாகாணங்களுக்கும் பரவியது.

1946 – இலங்கையில் ருவான்வெலிசாய தாதுகோபுரத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான புத்தரின் உருவ ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.[2]

1947 – பிரான்சியப் படையினர் அனோய் நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வியட் மின் படைகள் காட்டுக்குள் தப்பி ஓடினர்.

1948 – மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா இதனைப் பெற்றுக் கொண்டார்.[3]

1957 – நியூசிலாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1957 – கென்யாவின் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமாத்தி பிரித்தானியக் குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.

1959 – நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1965 – காம்பியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1972 – கலிபோர்னியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த அனைத்துக் கைதிகளினதும் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற அம்மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1991 – இலண்டனில் ஐஆர்ஏ போராளிகள் படிங்டன், விக்டோரியா தொடருந்து நிலையங்களில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

1992 – மகாமக குளம் நெரிசல்: கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர்.

2001 – அமெரிக்கப் புலனாய்வாளர் ராபர்ட் ஆன்சென் சோவியத் ஒன்றியத்தின் உளவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

2001 – இந்தோனேசியாவில் தயாக், மதுரா மக்களிடையே இனக்கலவரம் வெடித்தது. 500 பேர் வரையில் உயிரிழந்தனர். 100,000 மதுரா மக்கள் இடம்பெயர்ந்தனர்.

2003 – தென் கொரியாவில் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

2004 – ஈரான், நிசாப்பூர் நகரில் கந்தகம், பெட்ரோல், உரம் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 295 பேர் உயிரிழந்தனர்.

2007 – அரியானாவின் பானிப்பத் நகரில் விரைவுத் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

2010 – விக்கிலீக்ஸ் பிராட்லி மானிங் என்ற அமெரிக்க இராணுவ வீர்ர் ஒருவர் கொடுத்த இரகசிய ஆவணங்களின் முதல் தொகுதியை வெளியிட்டது.

2013 – பெல்சியத்தின் பிரசெல்சு வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தில் $50 மில்லியன் பெறுமதியான வைரங்கள் கொள்ளையிடப்பட்டன.

2014 – உக்ரைன் தலைநகர் கீவில் ஆர்பாட்டக்காரர்களுக்கும், காவல்துரையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 76 பேர் உயிரிழந்தனர்,

2014 – இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

2018 – ஈரானின் அசிமான் விமானம் 3704 சக்ரோசு மலைகளில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 65 பேரும் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

கிமு 259 – சின் சி ஹுவாங், சீனப் பேரரசர் (இ. கிமு 210)

1201 – நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக அறிவியலாளர் (இ. 1274)

1486 – சைதன்யர், இந்திய மதகுரு (இ. 1534)

1516 – இங்கிலாந்தின் முதலாம் மேரி (இ. 1558)

1745 – வோல்ட்டா, மின்கலத்தைக் கண்டுபிடித்த இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)

1836 – இராமகிருஷ்ணர், இந்திய ஆன்மிகத் தலைவர் (இ. 1886)

1838 – எர்னெசுட் மாக், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1916)

1860 – மா. சிங்காரவேலர், இந்தியப் பொதுவுடமைவாதி, தொழிற்சங்கவாதி, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1946)

1877 – அலைசு கிரேசு குக், பிரித்தானிய வானியலாளர் (இ. 1958)

1909 – சி. அருளம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1922 – அலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர் (இ. 1984)

1925 – கிருஷ்ணா சோப்தி, இந்திய எழுத்தாளர் (இ. 2019)

1926 – வ. ஐ. சுப்பிரமணியம், தமிழக மொழியியல் அறிஞர் (இ. 2009)

1927 – அப்துல் ஹலீம் ஜாபர் கான், இந்திய சித்தார் கலைஞர் (இ. 2017)

1931 – டோனி மாரிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 2019)

1974 – ஜூலியா பட்டர்பிளை ஹில், அமெரிக்க சூழலியலாளர்

இறப்புகள்

1294 – குப்லாய் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1215)

1405 – தைமூர், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1336)

1546 – மார்ட்டின் லூதர், செருமானிய இறையியலாளர் (பி. 1483)

1564 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய சிற்பி, ஓவியர் (பி. 1475)

1938 – மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன், சோவியத் கோட்பாட்டு இயற்பியலாளர் (பி. 1906)

1967 – ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1904)

1990 – ரிச்சர்ட் டி சொய்சா, இலங்கை ஊடகவியலாளர் (பி. 1958)

2015 – டி. ராமா நாயுடு, தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1936)

சிறப்பு நாள்

தேசிய சனநாயக நாள் (நேபாளம், 1951 ராணா வம்ச ஆட்சி ஒழிப்பு)

விடுதலை நாள் (காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1965)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!