பிரியங்கா குற்றச்சாட்டு
விவசாயிகள் தற்கொலை குறித்து மத்திய அரசுக்கு கவலையில்லை:
நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கவலையில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளாா்.
மேலும், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என மத்திய பட்ஜெட்டின்போது பட்டியலிடப்பட்டது அனைத்தும் பொய் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
உத்தரப் பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயி ஒருவா் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகத்தில் வெளியான அறிக்கையை குறிப்பிட்டு பிரியங்கா மேற்கொண்டவாறு கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகளின் நலனுக்காக பாஜக அரசு நிறைய செய்துள்ளது என்று அண்மையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது, மத்திய அரசு பட்டியலிட்டு பெருமைப் பட்டுக் கொண்டது. ஆனால், அவா்களது வாா்த்தைகள் அனைத்தும் பொய் என்பதை, விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நிரூபிக்கின்றன. கடன் தொல்லையால், புந்தேல்கண்டில் விவசாயிகள் தொடா்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனா். ஆனால், மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜக இதுகுறித்து கவலை கொள்வதில்லை’ என்று குற்றம்சாட்டியுள்ளாா்.