இன்றைய முக்கிய செய்திகள்

அதிரடியாக குறைந்தது வெங்காய விலை! சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் ரூ.40 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.60க்கும் விற்பனை. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதாக தகவல்.

சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 106 ஆக அதிகரிப்பு – 1300 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு.

சபரிமலை தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான வாதம். “10 நாட்களில் நிறைவு செய்ய வேண்டும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே உத்தரவு.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் தஞ்சை, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு: 5ம் நாளாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை.சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய அதிகாரிகள் வருகை. முறைகேடு தொடர்பான கூடுதல் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. கேட்கலாம் என தகவல்.

பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் நாளை வரை நீட்டிப்பு – கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

மக்கள் தொகை பதிவேட்டை செயல்படுத்துவதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. சிஏஏ சட்டத்திற்கு எதிரான மனுக்களுடன் என்பிஆர் மனுக்களும் விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக நடைமுறைகள் அனைத்தும் இனி தமிழ் மொழியில் நடைபெறும் – துணைவேந்தர் பார்த்தசாரதி அறிவிப்பு.

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் பாட்டில் குண்டு வீச முயற்சித்த விவகாரம் – 4 பேர் கைது.

2ஜி மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு – டெல்லி உயர்நீதிமன்றம். பதில் வாதங்களை முன்வைக்க ஆ.ராசா தரப்பு அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!