வரலாற்றில் இன்று (20.10.2024 )

 வரலாற்றில் இன்று (20.10.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

அக்டோபர் 20 (October 20) கிரிகோரியன் ஆண்டின் 293 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 294 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1803 – ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது.
1827 – ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
1941 – கிறகுஜேவாச் படுகொலைகள்: சேர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜெர்மனியிடமிருந்து மீட்டது.
1944 – கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பெர் கொல்லப்பட்டனர்.
1955 – த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது.
1946 – புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1973 – சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.
1976 – மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 ப்பயணிகள் கொல்லப்பட்டனர். 18 பேர் மட்டும் தப்பினர்.
1982 – இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
1982 – மாஸ்கோவில் இடம்பெற்ற பன்னாட்டு உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.
2001 – இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.
2004 – முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.

பிறப்புகள்

1469 – குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)
1884 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி (இ. 1952)
1923 – தொ. மு. சி. ரகுநாதன், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2001)
1923 – வி. எஸ். அச்சுதானந்தன், கேரள முதல்வர்
1925 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க நகைச்சுவையாளர்
1946 – எல்ஃப்ரீத் ஜெலினெக், ஆஸ்திரிய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர்
1954 – ந. செல்வராஜா, இலங்கையை சேர்ந்த நூலகவியலாளர், ஆய்வாளர்
1971 – ஸ்னூப் டாக், அமெரிக்க ராப் இசைக் கலைஞர்
1978 – வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்

இறப்புகள்

1984 – கார்ல் கோரி, ஆஸ்திரிய மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1896)
1984 – போல் டிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1902)
2008 – ஸ்ரீதர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1933)
2014 – ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)

சிறப்பு நாள்

பஹாய் சமயம் – புனித நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...