இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:

சுங்கத்துறை நடவடிக்கை:

      ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.பி பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தது எஸ்.பி பட்டிணம் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது கடற்கரையில் மறைத்து வைக்கபட்டிருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்ததில் 11 பண்டல்களில் 380 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்தது கஞ்சாவைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் கடத்தல்காரர்களைத் தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 கோடி என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!