நண்பனின் மகளை வன்புணர்வு செய்த காமக் கொடூரன் ..!!

 மதுவால் ஏற்பட்ட விபரீதம்..!!
தந்தைக்கு மது வாங்கி கொடுத்து அவரது மகளை இளைஞரொருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 25 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் .  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் 45 வயதான மீன்பிடி தொழிலாளி, அவருடன்  மின்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தவர் அதே பகுதியை சேர்ந்த 36  வயதான ஆரோக்கிய ஜூன் ,  இருவரும் அன்றாடம்  பணி முடித்துவிட்டு  மது அருந்துவது வழக்கம்.இந்நிலையில் ஆரோக்கிய ஜூன் ஒரு நாள் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார் . 

அப்பொழுது இந்த மீன்பிடி தொழிலாளிக்கு  பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இருப்பதை ஆரோக்கியம் கண்டுள்ளார் .  அத்துடன் அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரருக்கு காது மற்றும் வாய் பேச முடியாது என்பதையும் அறிந்து கொண்ட ஆரோக்கிய ஜூன்,  அந்த பெண்ணை அடைய திட்டமிட்டதுடன் சம்பவத்தன்று  பெண்ணின் தந்தையும் தனது நண்பருமான மீன்பிடி தொழிலாளிக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்துள்ளார் . அதிக மது குடித்து அந்தபெண்ணின் தந்தை மதுபோதையில் மயங்கினார்.   இந்நிலையில் வீட்டில் இருந்த 11ஆம் வகுப்பு  மாணவியை மிரட்டிய ஆரோக்கிய ஜூன்,  அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .  

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!