வரலாற்றில் இன்று – 21.12.2019 – எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி

தமிழ் மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்ட கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார்.
1970ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியில் சேர்ந்து, 17 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். இவர் கோழிக்கோடு மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தராகவும், கர்நாடக மத்திய பல்கலைக்கழக வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் ஆரம்பத்தில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார். சாகித்ய அகாடமி தலைவராக 1993ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எழுதிய ‘சம்ஸ்காரா’, ‘பவா’, ‘திவ்யா’, ‘அவஸ்தே’, ‘மௌனி’ உள்ளிட்ட பல படைப்புகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதி வந்த கட்டுரைகள் 8 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
இவர் ‘தமிழ் தனித்துவம் வாய்ந்தது, தமிழரின் கலாச்சார வேர்கள் வலிமையானவை’ என்பார். குழந்தைகளுக்குப் பள்ளியில் பயிற்று மொழியாகத் தாய்மொழி இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியவர்.
இவர் 1994ஆம் ஆண்டு ஞானபீட விருது பெற்றார். ராஜ்யோத்சவா, பத்மபூஷண் விருது மற்றும் இலக்கிய சாதனைக்காக பல முக்கிய விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.
2011ஆம் ஆண்டு இவரது ‘பாரதிபுரா’ படைப்பு ‘தி இந்து’ இலக்கியப் பரிசுக்காகவும், 2013ஆம் ஆண்டு இவரது பெயர் புக்கர் பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது.
உலக அளவில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளரான யு.ஆர்.அனந்தமூர்த்தி 2014ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்

  • 1913ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி உலகின் முதல் குறுக்கெழுத்துப் போட்டி நியூயார்க் வேர்ல்ட் பத்திரிக்கையில் வெளியானது.
  • 1968ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச்சென்ற விண்கலமான அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!