இளமையெனும் பூங்காற்று

 இளமையெனும் பூங்காற்று

இளமையெனும் பூங்காற்று

இளைய பருவம்
முதிர்ந்தாலும்
என்றும் என்னுள்
இளமையானவளாய்..

உழைத்து ஓடாய்
நான் போனாலும்
உன்னொருத்தியின்
வெள்ளைப் பற்கள்
புன்னகையில்
மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்..

கஞ்சி சோற்றில்
கலந்து சிரிக்கும்
மிளகாய் வெங்காயம்போல
உன் கொஞ்சி
பேச்சில்
சிதறுதடி எனதான
உன் காதல்..

சைக்கிள் சவாரியில்
எனது
இரு கை சிறையில்
முன்னே உட்கார்ந்து
சிரித்து சிரித்து
பேசும்
உன் கொஞ்சல்
மொழியில்
செத்துதான் போகிறது
மூச்சிரைக்க
மிதிக்கும் கால் வழியும்
நெஞ்சு படபடப்பும்..!!

பில்மோர் பாலசேனா,மலேசியா

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...