உறுதியானது தூக்கு தண்டனை..! – நிர்பயா வழக்கில்

 உறுதியானது தூக்கு தண்டனை..! – நிர்பயா வழக்கில்
நிர்பயா வழக்கில் இனி யாரும் தப்பமுடியாது… உறுதியானது தூக்கு தண்டனை..!
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி அக்ஷய் குமார் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பா் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு 6 பேர் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவா் சிறார் ஆவார்.

சீர்திருத்த இல்லத்தில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த அவர், பின்னர் விடுவிக்கப்பட்டார். 
மீதமுள்ள 5 பேரில் ராம் சிங் என்பவா் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதில் 3 குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், 4-வது குற்றவாளி அக்ஷய் குமார் தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...