கருப்பு நட்சத்திரங்கள் புத்தக வெளியீட்டு விழா

அகதி 
தாய்நாடு எங்களை முடமாக்கி
எதோ ஒரு இறுதிக்கட்டத்தை
நோக்கி எங்களைத் தள்ளிக்
கொண்டே வருகின்றது …

பூமி எங்களை நசுக்குகிறது
சிறு விதையாயினும்
நாங்கள் அதில் புதைக்கப்பட்டு
உயிர்ப்பிக்கப்படலாம் …
 சுபாஷினி கலைக்கண்ணன் அவர்கள் எழுதிய கவிதை. இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். துணை இயக்குநர், ஆசிரியர், பாடலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் என்று பல முகத்துக்கு சொந்தக்காரர். எட்டு வயதிலிருந்துக் கவிதை எழுதத்தொடங்கி, சிங்கப்பூர் தேசிய அளவில் 30 தமிழ் கவிதைப் போட்டிகளை வென்றுள்ளார். ‘அனல்'(2015) & கறுப்பு நட்சத்திரங்கள் (2019)’ என்னும் கவிதைத் தொகுப்புகளையும் இவர் வெளியிட்டுள்ளார் .
 இவரது கருப்பு நட்சத்திரங்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று இரவு அடையாரில் தோழர் லதா அவர்களின் தி புக் அவுஸில் மிக விமர்சையாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!