பொன்.மாணிக்கவேல் வழக்கு – அதிரடி உத்தரவு!

பொன்.மாணிக்கவேல் வழக்கு – அதிரடி உத்தரவு! சிலை கடத்தல் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க, பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை. பொன்.மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனு – உச்சநீதிமன்றம்  நோட்டீஸ்
பொன்.மாணிக்கவேல், ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு.

பொன். மாணிக்கவேல் பதவியை நீட்டிக்கக் கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரிக்க முடியாது உச்சநீதிமன்றம் 
பொன்.மாணிக்கவேல் இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது. பொன்.மாணிக்கவேலுக்கு பதிலாக நாங்களே வேறு ஒரு அதிகாரியை நியமிக்கிறோம் – தமிழக அரசு. தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன?- பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு கிடையாது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அக்கறை இருந்ததால் என்னை நியமித்து செயல்பாடுகளை கண்காணித்தது – பொன்.மாணிக்கவேல். சிலை கடத்தல் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!