ஓய்வெடுக்க பிரமாண்ட அமைவிடம் விரைவில் திருப்பதி செல்லும் பக்தர்கள்

 ஓய்வெடுக்க பிரமாண்ட அமைவிடம் விரைவில் திருப்பதி செல்லும் பக்தர்கள்

2015ம் ஆண்டில், திருப்பதி விமானநிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினலை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். கருடர் வடிவமைப்பில் இந்த டெர்மினல் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.டி மற்றும் சி ரக விமானங்களை கையாளும் வகையில் இந்த விமானநிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளில் இருந்தும் பெரும்பாலோனார் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்கி சிறப்பாக சாமி தரிசனம் செய்யும் பொருட்டு, ரேணிகுண்டாவில் அமைந்துள்ள திருப்பதி விமானநிலைய வளாகத்தில் 1800சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பயணிகள் ஓய்வறை விரைவில் கட்டப்பட உள்ளது.

திருப்பதி விமானநிலையத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எளிதாக செல்ல வாடகை கார், பஸ், டாக்ஸி உள்ளிட்ட சேவைகள் உள்ளன. திருப்பதி விமானநிலையத்தில் இருந்து மதுரை, சென்னை, ஐதராபாத், புனே, வாரணாசி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...