ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் மறுசீராய்வு மனு தள்ளுபடி:

ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி: பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ரூ.58 ஆயிரம் கோடி ஒப்பந்தம். 2016ம் ஆண்டு ஜன. 26ம் தேதி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் போட்டது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வழக்கு தொடரப்பட்டது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை 2018 டிச.14ல் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து, ராகுல்காந்தி விடுவிப்பு – உச்சநீதிமன்றம் எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும்போது ராகுல்காந்தி கூடுதல் கவனத்துடன் பேச அறிவுரை. ராகுல்காந்தி மீதான வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!