வரலாற்றில் இன்று (20.02.2024 )

 வரலாற்றில் இன்று (20.02.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 20 கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்

1472 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது.
1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார்.
1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.
1798 – திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1810 – பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு எதிரான கிளர்ச்சிப் படையின் தலைவர் அந்திரயாசு ஓஃபர் தூக்கிலிடப்பட்டார்.
1818 – இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1835 – சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.
1846 – தேசிய விடுதலைக்கான போராட்டமாக போலந்துக் கிளர்ச்சிவாதிகள் கிராக்கோவ் நகரில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
1865 – உருகுவைப் போர் முடிவுக்கு வந்தது. அரசுத்தலைவர் தொமாசு விலால்பாவுக்கும் கிளர்ச்சித் தலைவர் வெனான்சியோ புளோரெசிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1877 – சாய்கோவ்சுக்கியின் பாலே அன்ன ஏரி மாஸ்கோவின் பல்சோய் அரங்கில் முதல்தடவையாக மேடையேறியது.
1933 – நாட்சி கட்சிக்கு தேர்தல் நிதி சேர்ப்பதற்காக இட்லர் செருமானியத் தொழிலதிபர்களை இரகசியமாகச் சந்தித்தார்.
1935 – அந்தாட்டிக்காவுக்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கைச் சேர்ந்த கரொலைன் மிக்கெல்சன் ஏற்படுத்தினார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் போர் விமானங்கள் செருமனியின் வானூர்தி தயாரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தின.
1946 – இலங்கைக்கு முதன் முதலாக இரட்டைத் தட்டுப் பேருந்து கொண்டு வரப்பட்டது.
1962 – மேர்க்குரித் திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.
1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.
1979 – நிலநடுக்கம் காரணமாக H2S நச்சு வாயு பரவியதில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் 149 பேர் உயிரிழந்தனர்.
1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்கலத்தை ஏவியது. 15 ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டத்தில் இவ்விண்கலம் நிலைகொண்டிருந்தது.
1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
1988 – நகர்னோ-கரபாக் தன்னாட்சி மாவட்டம் அசர்பைசானில் இருந்து பிரிந்து ஆர்மீனியாவுடன் இணைய முடிவு செய்தது. இது நகர்னோ-கரபாக் போருக்கு வழிவகுத்தது.
1991 – அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில், அந்நாட்டின் நீண்ட நாள் அரசுத்தலைவராக இருந்த என்வர் ஒக்சாவின் மிகப் பெரும் சிலை ஒன்று ஆர்பாட்டக்காரர்களினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.
2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர்.
2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1844 – லுட்விக் போல்ட்ஸ்மான், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1906)
1876 – கா. நமச்சிவாய முதலியார், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1936)
1901 – பொபிலி அரசர், சென்னை மாகாணத்தின் 6வது முதலமைச்சர் (இ. 1978)
1925 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (இ. 2010)
1941 – லிம் கிட் சியாங், மலேசிய அரசியல்வாதி
1944 – விஜய நிர்மலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (இ. 2019)
1945 – ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்
1948 – கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய-சைப்பிரசு பொருளியலாளர்
1951 – கார்டன் பிரவுன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
1967 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (இ. 1994)
1986 – கலையரசன், தமிழ்த் திரைப்பட நடிகர்
1987 – மைல்ஸ் டெல்லர், அமெரிக்க நடிகர்
1988 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை , பாடகி (இ. 2013)
1990 – ஆதி வேங்கடபதி, இந்தியத் தமிழ் இசைக்கலைஞர்

இறப்புகள்

1762 – டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (பி. 1723)
1778 – லாரா மரியா, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1711)
1862 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பீனிய எழுத்தாளர் (பி. 1788)
1896 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1820)
1907 – ஆன்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1852)
1920 – ஜெசிந்தா மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1910)
1950 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், வழக்கறிஞர் (பி. 1889)
1972 – மரியா கோயெப்பெர்ட் மேயர், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)
1960 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (பி. 1901)
1987 – ஜோசப் பாறேக்காட்டில், கத்தோலிக்கத் திருச்சபை கர்தினால் (பி. 1912)
2001 – இந்திரஜித் குப்தா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1919)
2001 – யோகி ராம்சுரத்குமார், இந்திய ஆன்மிகத் துறவி (பி. 1918)
2008 – டி. ஜி. எஸ். தினகரன், கிறித்தவ மறைபரப்புனர் (பி. 1935)
2010 – ஸ்ரீதர் பிச்சையப்பா, இலங்கை வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1962)
2011 – மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்
2012 – ரா. கணபதி, தமிழக ஆன்மிக எழுத்தாளர், தமிழறிஞர்
2012 – எஸ். என். லட்சுமி, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (பி. 1934)
2014 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (பி. 1919)
2015 – கோவிந்த் பன்சாரே, இந்திய எழுத்தாளர் (பி. 1933)

சிறப்பு நாள்

சமூக நீதிக்கான உலக நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...