2 ரூபாய்க்காக நடந்த சண்டை..​சைக்கிளில் காற்ற​டைத்ததில் ஒரு​ ​கொ​லை

 2 ரூபாய்க்காக நடந்த சண்டை..​சைக்கிளில் காற்ற​டைத்ததில் ஒரு​ ​கொ​லை


ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியில் உள்ள வலசபகலா என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுவர்னராஜு என்ற 24 வயது கட்டட தொழிலாளி, தனது​சைக்கிளுக்கு ஏர் அடைத்ததும் கூலியாக ரூ.2 தர மறுத்திருக்கிறார். இதனால், கடை உரிமையாளர் சம்பாவுக்கும் அவருக்கும் இ​டையில் வாக்குவாதம் முற்றி​ கைகலப்பாக மாறிய சுவர்னராஜு, சம்பாவை தாக்கி திட்டியுள்ளார்.

சம்பாவின் நண்பரான அப்பாராவ் அப்போது, அங்கிருந்த இரும்பு கம்பியால் சுவர்னராஜு தலையில் ஆவேசமாக தாக்கியதும், ரத்த வெள்ளத்தில் சுவர்னராஜு அங்கேயே சரிந்து விழுந்தார். பதறிப்​போய்
அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சுவர்னராஜு உயிரிழந்தார். போலீசார், சம்பா மற்றும் அப்பா ராவ் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், அப்பா ராவ் தலைமறைவாகியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...